சென்னை: இந்திய வானிலை மைய இயக்குநரையே சென்னைக்கு வரவழைத்து கஜா புயல் சாதனை நிகழ்த்தியுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல்
3 நாட்களாக வங்கக் கடலில் நங்கூரம் பாய்ச்சி கொண்டு இருந்தது. இந்நிலையில்
கஜா இன்று இரவு கரையை கடக்கிறது.
இது கடலூர்- நாகை இடையே கரையை கடப்பதால் அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புயலால் 6 மாவட்டங்களில் உள்ள
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது 3 நாட்கள் ஒரே இடத்தில்
இருந்ததால் இது தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பயண பாதை
மேற்கொள்ள
இதனிடையே தற்போது இதன் பயண பாதையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கஜா புயல் குறித்து அறிந்து கொள்ள சென்னை வானிலை ஆய்வு மைய
அதிகாரிகளுடன் இந்திய வானிலை மைய தலைமை இயக்குனர் ரமேஷ் ஆய்வு மேற்கொள்ள
சென்னை வந்தார்.
சென்னை
நுங்கம்பாக்கம் அலுவலகம்
அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் சென்னை வானிலை ஆய்வு மைய
இயக்குனர்கள், அதிகாரிகள் கஜா புயலின் தன்மை குறித்து தலைமை இயக்குநர்
கே.ஜே.ரமேஷுக்கு விளக்கினர்.
கரையை கடக்கும்
மழை பெய்யும்
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இரவு 8 மணியில் இருந்து 11
மணிக்குள் கஜா புயல் கரையை கடக்கும். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை,
புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யும் என
கூறியுள்ளார்.
புயல் கரையை
சாதனை
மேலும், புயல் கரையை கடந்த பிறகு தமிழகத்தில் உள்மாவட்டங்களிலும்,
கேரளாவிலும் மழை பெய்யும். நாளை மாலை கஜா புயல் அரபிக் கடலுக்கு செல்லும்
என ரமேஷ் கூறியுள்ளார். இந்திய வானிலை மைய தலைமை இயக்குநரையே சென்னைக்கு
வரவழைத்தது கஜாவின் சாதனையாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...