
குலாப் ஜாமூன், லட்டு, ஜிலேப்பி போன்ற சுவைமிக்க இனிப்பு வகைகளை நாம் அதிகம் விரும்பி உண்ணுவோம். இவற்றை செய்து வைத்தாலே நமக்கு நாக்கில் எச்சி ஊறும். சர்க்கரை அதிகம் கொண்ட பண்டங்கள் ஒரு வகையில் நமக்கு இன்பத்தை தந்தாலும், மறுபுறத்தில் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துமாம்.
நாம் சர்க்கரையை சாப்பிடும் போது, நமது உடலில் கொழுப்புகள் அதிக அளவில் சேர தொடங்கும். சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டால் கொழுப்பின் அளவும் அதிகரிக்க கூடும். இதனால் தான், சர்க்கரை நோயாளிகளை இனிப்பு பண்டங்களை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில், இவை சர்க்கரையின் அளவை அதிகரித்து இதய நோய்களையும் உருவாக்கி விடும்.