ஒரு யோசனை....
நாம் வரும் மே மாதம் வரை பணம் செலுத்த வேண்டாம்.
இதனால் என்ன பயன் என்றால் நாம் இந்த மூன்று மாதம் டீவி பார்க்க வில்லை என்றால் அவர்களின் விளம்பர வருமானம் பெருமளவு குறைந்து விடும்.
பின் தானாகவே அவர்களே இலவச சானல் ஆக்கி விடுவார்கள் அல்லது விலை இன்னும் குறைக்கப்படும்...
இரண்டாவது பயன் என்ன என்றால் மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மார்ச் மாதம் நடக்கும் அதனால் மாணவ செல்வங்கள் தேர்வு க்கு நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள்.
மூன்றாவது என்ன என்றால் இந்த மூன்று மாதத்தில் நமக்கே அது பழகி விடும். வீட்டில் நாடகம் பார்த்து பார்த்து மனம் வெதும்பி அதில் மூழ்கி கிடக்கும் குடும்பத்தினரையும் மீட்க முடியும்... முயற்சித்து தான் பார்ப்போமே...
இனி ஊடகம் நம்மை வழிநடத்த வேண்டாம் நாம் நடத்துவோம்..
..🤝🏻💐🤘🏻💐
படித்ததில் பிடித்தது.








