பூச்சிகள், எறும்புகள், கரப்பான்கள் இவற்றிற்கும் ரத்த ஓட்டம் உண்டு.
இந்த ரத்தத்தின் பெயர் ஹிமோலிம்ஃப் ஆகும். இந்த ஹிமோலிம்ஃப் எனும் ரத்தமானது ஹீமோசயானின் என்ற வேதிப்பொருளால் இப்பிராணிகளின் மேல் சருமத்தின் மூலம் பெறப்படும் பிராண வாயுவைக் கொண்டு சுத்தம்
செய்யப்படுகிறது. இந்த ரத்த ஓட்ட முறையானது "திறந்த முறை" எனப்படும்.
இந்த ரத்தத்தின் பெயர் ஹிமோலிம்ஃப் ஆகும். இந்த ஹிமோலிம்ஃப் எனும் ரத்தமானது ஹீமோசயானின் என்ற வேதிப்பொருளால் இப்பிராணிகளின் மேல் சருமத்தின் மூலம் பெறப்படும் பிராண வாயுவைக் கொண்டு சுத்தம்
செய்யப்படுகிறது. இந்த ரத்த ஓட்ட முறையானது "திறந்த முறை" எனப்படும்.
பூச்சிகளின் உடலில் உள்ள வெற்றிடங்கள் மிக மெல்லிய திசுக்களால் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு ரத்த நாளம் மட்டும் இவற்றின் மூளையிலிருந்து வயிற்றுப் பகுதிவரை செல்கிறது. இதுவே இதயம் போல செயலாற்றுகிறது. இந்த நாளமும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வால்வுகளின்றி, இதனுள் உள்ள திசுக்களால் சுருங்கியும் விரிந்தும் செயலாற்றி ரத்த சுழற்சிக்குக் காரணமாகிறது.
ஒருமுறை தலையை நோக்கிச் செலுத்தப்பட்ட ரத்தமானது, பூச்சிகளின் மேல் தோலில் படும் பிராணவாயுவினால் ஹீமோ சயானால் சுத்தமாகி, மறுபடியும் வயிற்றை வந்த அடைகிறது. இவ்வாறாக இந்த இதயம் செயலாற்றுகிறது.
பிராணவாயு குறைந்து காணப்படும் இடங்களில் வாழும் பூச்சிகளுக்கு ஹீமோகுளோபின் போன்ற வேதிப் பொருள் பிராண வாயுவை திசுக்களால் செலுத்துகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...