2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் அடிப்படையில்
தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம்
முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா
பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு
வருகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கல்லூரிகள் தரவரிசை பட்டியலை
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறை நேற்று வெளியிட்டது.
aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள், பெற்றோர் மேற்கண்ட இணையதளத்தில் அக்டமிக் பெர்பார்மன்ஸ் ஆப்
அபிலியேட்டட் காலேஜஸ் என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் கடந்த 5
ஆண்டுகளுக்கான தேர்வு தரவரிசை பட்டியல்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றை
பதிவிறக்கம் செய்து கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை ஒப்பிட்டு பார்த்து
இன்ஜினியரிங் கலந்தாய்வை எதிர்ேநாக்கியுள்ள மாணவர்கள் கல்லூரியை தேர்வு
செய்யலாம். 2018ம் ஆண்டு நவம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 481 கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் அதிகபட்சமாக சேலத்தை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேன்ட்லூம் டெக்னாலஜி கல்லூரியில் 88.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 6 கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விகிதத்தை விட, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி ெபற்றவர்களின் விகிதம் குறைவாக உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் கல்லூரிகளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி இன்ஜினியரிங் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை விட, தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
இணைவு பெற்ற கல்லூரிகளை பொறுத்தவரை தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 481 கல்லூரிகளில் சில கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். சில கல்லூரிகளில் மொத்தமே இரட்டை இலக்க எண்ணிக்கை (100 பேருக்கும் குறைவாக) மாணவர்கள் பயின்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பை எதிர்நோக்கியே மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்க வருகிறார்கள். அப்படியிருக்கையில் பணி நியமனம் (கேம்பஸ் பிளேஸ்மன்ட்) அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிட்டால் மட்டுமே அது இன்ஜினியரிங் சேர உள்ள மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...