கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி தேர்ச்சி விகிதத்தில் கீழ் நிலையில் இருந்த அரசுப் பள்ளி தற்போது தொடர்ந்து நூறு சதவிகிதம் தேர்ச்சியடைந்து வருகிறது. இதற்காக அப்பள்ளியின் ஆசிரியர்களின் கடுமையான உழைப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர்களுக்குத் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அமைந்துள்ளது கல்லூரணி கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 130 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 39 மாணவ மாணவிகள் எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சியடைந்தனர். இதற்குக் காரணமாக இருந்த 6 ஆசிரியர்களுக்குத் தங்க மோதிரம் அணிவிக்கும் விழா அக்கிராமத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து கல்லூரணி கிராமத்தைச் மோகன்குமாரிடம் பேசினோம். ``கடந்த 8 வருடத்துக்கு முன் இந்தப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. கல்வித்துறையில் இருந்து என்னிடம் பேசினார்கள். அதன்பிறகு மாலை நேரத்தில் டியூஷன். அங்கே படிக்க வரும் மாணவ மாணவிகளுக்கு டீ, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்தோம். நூறு சதவிகிதம் பள்ளியில் தேர்ச்சி விகிதம் காட்டும் ஆசிரியர்களுக்கு தங்கமோதிரம் பரிசு என்று அறிவித்தேன். பரிசு அறிவித்த அடுத்தாண்டு ஒரு மாணவன் மட்டும் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததால் அந்தாண்டு நூறு சதவிகிதம் இலக்கை அடையமுடியவில்லை.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...