புதுடில்லி: புதிய மாற்றங்கள்.. வாட்ஸ் அப் செயலியில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக வாட்ஸ் அப்பில் பெண்கள் தங்கள் சொந்த புகைப்படத்தை வைப்பதில் சிக்கல் எழுகிறது. ஏனெனில் விஷமிகள் அவற்றை தரவிறக்கம் செய்து, எடிட்டிங், மார்பிங் மூலம் பெண்களை மிரட்ட பயன்படுத்துகின்றனர். மேலும், தனிப்பட்ட சில புகைப்படங்களை ஆண்களும் கூட பாதுகாக்க முடிவதில்லை.
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா பதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி பயனர்கள் இனி மற்றவர்களின் புரோபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாது. இதுதவிர வாட்ஸ்அப் போட்டோ ஆல்ப தோற்றத்தை உருமாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது.
இதுமட்டுமின்றி, வாய்ஸ் மெசேஜ்கள், வாய்ஸ் கால் உள்ளிட்ட அம்சங்களிலும் வாட்ஸ்அப் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. எதிர்கால அப்டேட்களில் இன்டராக்டிவ் பட்டன்களை சேர்க்கவும் டெவலப்பர்கள் பணியாற்றி வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...