தமிழை மொழிப் பாடமாக பயிலாமல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி
வரும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்க அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
தமிழை ஒரு மொழிப் பாடமாக பயிலாமல் பிற மொழிகளில் பயின்று பட்டம் பெற்று
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்,
டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்படும் தமிழ்மொழி 2-ஆம் நிலைத் தேர்வை எழுதி
தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.
பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த நிலையில் தமிழ்மொழி 2-ஆம் நிலைத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாமல்,
தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை
உடனடியாக அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...