இன்றைய சிந்தனை..( 28..07.2019..)
'' நீங்கள் அனுமதிக்காமல்.
ஒருவரின் உடந்தை இல்லாமல் யாரும், யாரையும் தாழ்த்தி விட முடியாது. தாழ்வக உணர்ந்தால் அதை செய்தவர் அவரே ஆவார்..
கடலில் இருக்கிற அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட கப்பலை மூழ்கடிக்க முடியாது.. கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்.
வாழ்வில் எந்த பிரச்சனையும் உங்களைப் பாதிக்காது நீங்கள் அனுமத்தித்தால் தவிர.. ஆக இது போன்ற சூழ்நிலையிலே ஒருவரை உயர்த்திப் பிடிக்கிற ஒரே ஆள் அவரின் மனம்தான்.
புத்தர் பெரிய அரச வம்சம். ஆனால் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசி ஆகிறார். ஒரு ஊருக்குள் சென்ற போது கோவணமும் கையோட்டையும் பார்த்த மக்கள் பரிகாசிக்கிறார்கள்.
அவர் மீது கல் வீசுகிறார்கள். அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக்காரனைப்போல திரிகிறாயே’ என்றெல்லாம் கேலி செய்கிறார்கள்.
புத்தரிடம் எந்த சலனும் இல்லை. கேலி செய்த மக்களுக்கோ குற்ற உணர்வு உண்டாயிற்று.
புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து,நாங்க இவ்வளவு அவமானம்படுத்தியும், நீங்கள் அமைதியாக அல்லவா இருக்கிறீர்!” அமைதியாக மட்டுமா! ஆனந்தமாக அதெப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது?
புத்தர் சொன்னார்,
“நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன்.அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர்.
நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகி விட்டன. அதனால் அவற்றை ஏற்கவில்லை.
அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம்?” என்று வினவினார்.
யார் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்குத்தான் சொந்தம்” என்றனர் மக்கள்.
“இப்போது நீங்கள் செய்த அவமானங்களை நான் ஏற்கவில்லை. அப்படி என்றால் அவை யாருக்கு சொந்தம்?” என்றார் புத்தர்.
“எங்களுக்குத்தான் என்றனர் மக்கள்.. சரி, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றார்” புத்தர்.
ஆம்.,நண்பர்களே..,
மற்றவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும் சிறுமைப்படுத்தும் போதும்,கோபப் படுத்தும்போதும், உங்களுக்கு உள்ள இடத்தை பறிக்கும் போதும்,
• அவசரப்படாதீர்கள்..• ஆத்திரப்படாதீர்கள்
• கொஞ்சம் நிதானத்தை கையிலெடுங்கள்.
• உங்கள் மனதை தயார்படுத்துவதில்தான்
உங்கள் வெற்றியே அமையும்
'' நீங்கள் அனுமதிக்காமல்.
ஒருவரின் உடந்தை இல்லாமல் யாரும், யாரையும் தாழ்த்தி விட முடியாது. தாழ்வக உணர்ந்தால் அதை செய்தவர் அவரே ஆவார்..
கடலில் இருக்கிற அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால் கூட கப்பலை மூழ்கடிக்க முடியாது.. கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்.
வாழ்வில் எந்த பிரச்சனையும் உங்களைப் பாதிக்காது நீங்கள் அனுமத்தித்தால் தவிர.. ஆக இது போன்ற சூழ்நிலையிலே ஒருவரை உயர்த்திப் பிடிக்கிற ஒரே ஆள் அவரின் மனம்தான்.
புத்தர் பெரிய அரச வம்சம். ஆனால் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசி ஆகிறார். ஒரு ஊருக்குள் சென்ற போது கோவணமும் கையோட்டையும் பார்த்த மக்கள் பரிகாசிக்கிறார்கள்.
அவர் மீது கல் வீசுகிறார்கள். அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக்காரனைப்போல திரிகிறாயே’ என்றெல்லாம் கேலி செய்கிறார்கள்.
புத்தரிடம் எந்த சலனும் இல்லை. கேலி செய்த மக்களுக்கோ குற்ற உணர்வு உண்டாயிற்று.
புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து,நாங்க இவ்வளவு அவமானம்படுத்தியும், நீங்கள் அமைதியாக அல்லவா இருக்கிறீர்!” அமைதியாக மட்டுமா! ஆனந்தமாக அதெப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது?
புத்தர் சொன்னார்,
“நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன்.அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர்.
நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகி விட்டன. அதனால் அவற்றை ஏற்கவில்லை.
அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம்?” என்று வினவினார்.
யார் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்குத்தான் சொந்தம்” என்றனர் மக்கள்.
“இப்போது நீங்கள் செய்த அவமானங்களை நான் ஏற்கவில்லை. அப்படி என்றால் அவை யாருக்கு சொந்தம்?” என்றார் புத்தர்.
“எங்களுக்குத்தான் என்றனர் மக்கள்.. சரி, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றார்” புத்தர்.
ஆம்.,நண்பர்களே..,
மற்றவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும் சிறுமைப்படுத்தும் போதும்,கோபப் படுத்தும்போதும், உங்களுக்கு உள்ள இடத்தை பறிக்கும் போதும்,
• அவசரப்படாதீர்கள்..• ஆத்திரப்படாதீர்கள்
• கொஞ்சம் நிதானத்தை கையிலெடுங்கள்.
• உங்கள் மனதை தயார்படுத்துவதில்தான்
உங்கள் வெற்றியே அமையும்