இன்னொரு தரம் சேற்றை அள்ளி எங்கள் முகங்களில் வீசுகிறீர்கள்
உயரத்திலிருந்து பார்ப்பதால் உங்களுக்கு கிழிந்த காகிதமாய் தெரியலாம்
இறங்கி வாருங்கள் காணுங்கள் ஊடக வெளிச்சமற்ற கற்பூரங்களை
உங்கள் பொருந்தாக் கருத்தைத் திணிக்க கூட உங்களுக்கு மினுமினுப்பு தேவைப்படுகிறது
எங்களுக்கோ மின்விசிறியற்ற அறையினில் கூட எதிர்காலத் தென்றல்களை இறுக்கமின்றிச் சிருஷ்டிக்க இயலும்.
ஓடியோடி உழைப்பவனை ஓ.டி.க்காக உழைக்கிறவன் என உங்கள் சில்லறை விமர்சனங்கள் எங்களை ஒருபோதும் சிதைத்திடாது
வெட்டிப்பயல்களுக்கு கொட்டிக் கொடுப்பதாய்
நீங்கள் காட்டுகிற பம்மாத்து பேரசிங்கம்
மாணவரைச்சுற்றியே இயங்குகிற எங்களிதயத்தில் நீங்கள் பொருத்தமற்று கீறுவதை விட இருக்குமா இவ்வுலகில் ஒரு பெருவதை?
நீங்கள் கற்பனை கதையளக்கலாம்
அதற்காக எங்கள் உழைப்பினை எப்படி சிதைத்துச் சித்தரிக்கலாம்?
திடீர் ஞானோதயக்காரர்களே
நீங்கள் களம் கண்டு கதையளந்திடுங்கள்
உங்கள் வெறுப்பிலும் பிதற்றலிலும் வக்கிர சிந்தையிலும் தோன்றுமுங்கள் கதைகளில் கைக்காசு பார்ப்பவர்களே
நாங்கள் பாடங்களில் படம் காட்டுபவர்கள்
கையூட்டு பெற்றொன்றும் எங்கள் அடுப்புகள் பொங்குவதுமில்லை
வரியேய்ப்பு செய்தொன்றும் நாங்கள்
வீர வசனங்கள் பேசுவதுமில்லை
ஓய்வின்றி உழைக்கிற சூரியன்களை மின்மினிகள் கருக்கிடுமா என்ன?
மலங்களையே பார்த்துப்பழகிய உங்களுங்கு சந்தனங்கள் சாதாரணமே
இன்னொரு தரம் படமெடுக்கிறேன் என்று எங்களுக்குப் பாடமெடுக்காதீர்
மீள மீள ஒப்புயர்வற்ற ஆத்மாக்களை கறை படுத்தாதீர்
சம்பளத்தை தாண்டிய ஏதோ ஒரு பிணைப்புடனே வாழ்ந்து வருகிறோம்
எங்களை இனியேனும் மன உளைச்சலற்று பணி செய்ய விடுங்கள்
உங்கள் அற்ப அரசியலுக்கு பலிகடாக்கள் அல்ல நாங்கள்
இங்கு ராட்சசிகள் தேவையில்லை
அன்பின் பிடி கொடுக்கும் இரட்சகர்களே போதும்
ஆம்,
நாங்கள் ரட்சகர்கள்
சீனி.தனஞ்செழியன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...