பள்ளி வேலை நேரங்களில், கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்:ஆசிரியர்களுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பள்ளி வேலை நேரங்களில், கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்:ஆசிரியர்களுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை

🌹👉பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
👉பள்ளிகளின் நிர்வாக விபரங்கள், மாணவர், ஆசிரியர் விபரங்கள் போன்றவை, பள்ளி மேலாண்மை இணையதளமான, எமிஸில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
👉இயக்குனர் அலுவலகங்களி
ல் இருந்து, இந்த விபரங்களை கேட்டால், இணையதள விபரங்களை, மின்னணு முறையில் அனுப்பி விடலாம்.
👉இந்த விபரங்களுக்காக, ஆசிரியர்களை நேரில் அழைத்து, கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படாது.
👉அதேநேரம், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் நடத்த வேண்டியிருந்தால், மாலை நேரம் அல்லது சனிக்கிழமைகளில் நடத்தலாம்.
👉அதனால், பள்ளி வேலை நேரம் பாதிக்கப்படாது.
👉மேலும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், விபரங்களை கேட்கவும், அளிக்கவும், பள்ளி வேலை நேரங்களில், கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
👉தேவைப்படும் விபரங்களை, இ - மெயில் வழியே அனுப்பினால், பள்ளியின் வேலை நேரம் பாதிக்கப்படாது.
👉ஆசிரியர்களும் பள்ளி வேலை நேரங்களில், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
👉இவற்றை எல்லாம் கண்டிப்புடன் பின்பற்றும்படி, ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
🌹🌹ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

🌹👉ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
👉பட்ஜெட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயருகிறது.
👉மின்சார கார்களின் விலை குறைகிறது.         👉ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது
👉மாத சம்பளம் பெறுபவர்களை பொறுத்தமட்டில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
👉அதாவது வருமான வரி செலுத்தத்தக்க வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது.
👉அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை, அதிகபட்சமாக ரூ.45 லட்சம் வரை மதிப்பிலான வீடு வாங்குபவர்களுக்கு வங்கி கடனுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1½ லட்சம் கழித்துக்கொள்ளலாம்.
👉தற்போது இந்த சலுகை ரூ.2 லட்சமாக உள்ளது.

🌹கூடுதல் வரி🌹

👉நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி விகிதங்களில், அடுக்குகளில் மாற்றம் இல்லை என அறிவித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கூடுதலாக வருமானம் சம்பாதிப்பவர்கள் கூடுதலாக வரி பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கூறினார்.
👉அந்த வகையில் ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை உள்ள தனி நபர்கள் 3 சதவீதம் கூடுதல் வரியும், ரூ.5 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள தனி நபர்கள் 7 சதவீதம் கூடுதல் வரியும் செலுத்த வேண்டும்.
👉வருமான வரி கணக்கு தாக்கலுக்கு வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) இல்லாத பட்சத்தில், ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
🌹🌹ஜூலை 8ல் மருத்துவ கலந்தாய்வு : இன்று தரவரிசைப்பட்டியல் வெளியீடு

🌹👉தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
👉நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
👉தமிழக நீட் தேர்வை உடனடியாக அமல்படுத்த முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்ததால் ஓராண்டுக்கு மட்டும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கப்பட்டது.
 👉2017ம் ஆண்டு பிப் 1ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட  இரு சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு இதுவரை குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தரவில்லை.
👉மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
👉இந்த ஆண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் நீங்கலாக, பிற ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று கூறப்படுகிறது.
👉கடந்த 3 ஆண்டுகளாக நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
👉இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது.
 👉14,10,755 பேர் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 1,23,078 பேர் தேர்வு எழுதினர். அதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
👉தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் ஜூன் 7ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிந்தது.
👉அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 39,013 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 29,007 என மொத்தம் 68,020 பேர் விண்ணப்பித்துள்னளர்.
👉இந்த மாணவர்களுக்கான  தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
👉ஜூலை 8ம் தேதி சிறப்புப்பிரிவு இடங்களுக்கும், ஜூலை 9ம் தேதி முதல் பொதுப்பிரிவு  இடங்களுக்கும் கலந்தாய்வு தொடங்க உள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H