🍒🍒புதிய பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள தவறுகளைக் கண்ட றிந்து சரிசெய்ய பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.
🍒🍒தேர்ச்சி விகிதம் அதிகம் காட்டிய 59 தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் - நாளிதழ் செய்தி
🍒🍒இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது ஹெல்மட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம். மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்: அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகன சட்டம்.
🍒🍒உலக வங்கி ஆய்வின்படி உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 7 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
🍒🍒தேர்ச்சி விகிதம் அதிகம் காட்டிய 59 தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் - நாளிதழ் செய்தி
🍒🍒இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது ஹெல்மட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம். மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்: அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகன சட்டம்.
🍒🍒உலக வங்கி ஆய்வின்படி உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 7 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
🍒🍒தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் பாடங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பாடல்கள், கதைகள், நடனம் ஆகியவை மூலம் பாடங்களை கற்றுத்தரும் புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.
🍒🍒பள்ளி வேலை நாள்கள் குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளில் ஆடியோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
🍒🍒சிறார்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை வழங்க வழிவகுக்கும் போக்சோ சட்ட திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது
🍒🍒சுதந்திர தின விழாவில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட வேண்டும்: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவு
🍒🍒DEE PROCEEDINGS-சுதந்திர விழா கொண்டாடுதல் குறித்த தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு
🍒🍒அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பெண் சத்துணவு அமைப்பாளர்கள்,543 பேருக்கு, 'மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் நிலை - 2' பதவி
🍒🍒பேரிடர் காலங்களில் மத்திய அரசு செய்யக்கூடிய உதவி போதுமானதாக இருப்பதில்லை
தமிழக அரசு எதிர்பார்க்க கூடிய உதவிகளை மத்திய அரசு செய்வதில்லை
- தலைமைச் செயலாளர் சண்முகம்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🌹🌹எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளை பாதியில் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது
🌹👉அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின.
👉கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டால், ஒரு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
👉இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிக்கை:
👉அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இடங்கள் பெற்ற மாணவர்கள், இன்று (ஆக.,3) மற்றும் நாளை (ஆக.,4), படிப்பை கைவிடுவதென்றால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
👉மேலும், 6ம் தேதிக்கு மேல், படிப்பை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
👉அதேபோல், பி.டி.எஸ்., படிப்பில் இடங்கள் பெற்றவர்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால், இன்றைக்குள் படிப்பை கைவிடலாம். வரும், 5, 6ம் தேதிகளில் படிப்பை கைவிடுவதென்றால், ஒரு லட்சம் ரூபாய்; 7ம் தேதிக்கு மேல் படிப்பை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926