அன்பின் பிறப்பிடம் நம்பிக்கையின் கருவறையில் தான். எவர் ஒருவர் மீது நம்பிக்கை வருகிறதோ அவர்களிடம் வெளிபடையாக இருக்கிறோம்…
நாம் வாழ்வில் நடந்த, நடக்கின்ற, நடக்க விரும்பு கின்ற அனைத்தும் பகிர்கின்றோம்..ஆனால் அன்பு வைக்கும் அனைவரிடமும் இதை சொல்வதில்லை…
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறையபொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.
நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும்
எனக்கு தா என்று கேட்டான். குட்டி பெண்ணும்அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.
அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல
பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த
குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான். குட்டி பெண் எல்லா இனிப்பு களையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.
அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக
உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்பு களையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை..
நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா? என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் இருந்தான்...
ஆம்.,நண்பர்களே..,
நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்க வில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.
இது காதலுக்கும், நட்புக்கும்,வேலை செய்யும்இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் இது பொருந்தும்.
எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்..