இன்று நாங்கள்நசுக்கப்படலாம்
ஆரம்ப கல்வியை
அடக்கிவிட்டதாக
மார்தட்டிக்கொள்ளலாம்
எங்களை ஒடுக்க
இனிய சகோதரனே உன்னை
பகடை காயாக்கியதுதான்
பாராளும் கூட்டத்தின்
பார்போற்றும் வெற்றி
ஜனவரி 2019 இறுதி வாரம்
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் போல்
போர்க்களத்தில் போர்வீரர்களுடன்
உரிமை மீட்பு போராட்டத்தில்
லட்சோபலட்சம் தோழர்கள்
எஞ்சியவர்கள் மத்திய சிறையில்
இருந்தாலும் உன்னை நம்பினோம்
அடைக்கப்பட்ட தோழர்கள்
ஆடையின்றி அம்மணாமாக்கப்பட்டபோது
அடைந்த துயரைவிடவா
பிரிதொரு துயரம்
எங்களை வாட்டப்போகிறது?
பள்ளி இணைப்பு
வளாக பள்ளி என்றெல்லாம்
வசதியாக பெயரழைத்தாலும்
தீராத துன்பம் எங்களுக்கு மட்டுமல்ல
ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தோடு
நீயும்தான் என்பதை ஏன் மறந்தாயோ?
கூடுதல் சுமையென்று
கூக்குரல் எங்காவது
கேட்டிடாதா?
இணைப்பு என்று சொல்லி
எங்களை பிரித்தாளும் சூழ்ச்சியை
இணைந்தே முறியடிப்போம்
என்ற ஏக்க குரலாவது வந்திடாதா?
வருத்துமுடனே பகிர்கிறேன்
பதவி உயர்வற்ற பாழாய்போன
கரைகடத்தும் பணியில்
காலடி ஓசையின்றி
கரம் கோர்த்தது நியாயமா?
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி
தலைமை யாவற்றிக்கும்
உரமிட்ட வளர்த்த அடி உரம்
நாங்கள் அல்லவா?
வேரை பிடிங்கி
வெற்று செடியை நட்டு பயன் ஏது?
ஒரினம் பாதிக்கும்போது
வேறினம்போல் விலகி நிக்கலாமா?
பணிப்பளு அதிகமென்று
பாசாங்காவாது செய்திட வேண்டாமா?
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
சகத்தினை அழித்திடுவோம்னு
பாரதி பாடியதை பாங்குடனே
கற்பிக்கிறோம்.
கற்பித்ததை கடைபிடிக்க வேண்டாமா?
1994ல் அம்மையார் கொடுத்த வரத்தை
அம்மாவின் பெயரால் ஆட்சி செய்யும்
ஆட்சியாளர்கள் அபகரிக்கலாமா?
ஆரு செய்த சூழ்ச்சி இது
அறியாமல் விழிக்கிறோமே...
சூழ்ச்சி வலையில்
சூதகமாய் சிக்கிவிட்டாய்
சுயநினைவு வந்தவுடன்
சுதாரிக்க வேண்டாமா?
பக்கத்து வீடுதான் எரிகிறது
என்று பார்க்காமல் சென்றால்
நொந்தல்லவா போய்விடுவாய்
கல்வித்தரம் மேம்பாடு
கட்டாயம் வேண்டும்தான் அதற்காக
காலமெல்லாம் பதட்டமுடனே
காலம் கடத்த வேண்டுமென்றால்
உளவியல் எதற்கு?
அதிகார போதை
அரங்கேற போகுதுனு
ஆளாளுக்கு சொல்றாக
அறிவூட்டும் துறைக்கு இது
ஆகாதுனு அடிச்சு பேச
ஆளில்லாமல் தவிக்குது
பின்லாந்து கல்விமுறை
பின்பற்ற போறாகனு
பிசுபிசுக்கும் குரல்கள்
எல்லாத்தையும்
ஒழித்துவிட்டு எதைபத்தி பேச
எங்க ஊரு பிள்ளைக
கல்லூரி வாசல் மிதித்து
கனவில் கூட காணாத
கல்வியை பெற தொடங்கையில்
பிஞ்சிலே நசுக்கும்
கொடுஞ்செயல் தேவையா?
மனமகிழ்வுடன் கற்பித்த காலம் போய்
மன இறுக்கத்துடன் கற்பிக்க முடியுமா?
அனுப்பிய கடிதாசி 6 மாதத்திற்கு மேல்
அவுக அலுவலகத்திலேயே தூங்கிபோக
அது தீர்க்க வழியின்றி தவிக்கையில்
அஞ்சாறு பேருக்கு தகவல் சொல்ல சொல்லி
ஆணை பிறப்பிச்சாச்சு.
இதுவும் கடந்து போகும்
என்ற லட்சிய வரிகள்
மரித்துபோவதில்லை
ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்
அதிகாரம் பறித்து
உயர்நிலை மேல்நிலைக்கு
ஒட்டுமொத்த குவியலா?
ஒரு கணம் சிந்தீப்பீர்
ஒராயிரம் முறை பலன் பெறலாம்
ஒற்றுமையில் வேற்றுமையல்ல
வேற்றுமையில் ஒற்றுமை
என்ற தாரக மந்திரத்தோடு
ஒன்றுபட்டு இயங்குவோம்.
உயர்நிலை, மேல்நிலை
நடுநிலை, ஆரம்பநிலை
எல்லாமே ஒரே நிலைதான்
ஓரினத்தின் சங்கமம் தான்.
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்