வாழ்க்கைத் தத்துவம்
- கவிதை.
பாழும்
வயிற்றை நிரப்ப
வேகாத வெயிலில்
வேகும் கூத்துக்களை
ஆடும் கழைக்கூத்தாடியின்
ஆட்டமெல்லாம் தத்துவம்..!
ஆயிரமாயிரம் பூக்களில் பயணித்து
வில்லாய் வளைந்து விழும்
சொட்டுத்
தேன் எடுத்தாலும்
கட்டித்தேன் என்பது தேனீக்களின் தத்துவமே..!
தரைக்கே வராமல்
காற்றோடு கலந்தும்..
பூமியோடு கரைந்தும்..
ஒளி தரும் நிலவின்
அழகோ
தத்துவம்..!
கண்ணுக்குப் புலனாகாமல்
எங்கோ உருவாகி
கடலில் சங்கமிக்கும்
நதியின் பயணம் தத்துவமே..!
தெருப் புழுதியில்
வீடு கட்டி..
பால் காய்ச்சாமல்
குடிபுகும் கறையானின்
மண்வீடு
தத்துவமே..!
உலகின் பொய்யை உள்ளத்தில் சுமந்து..
பொய்யின் உருவம் கொண்டு..
புனிதத்தை மறைக்கும்
இருளின் உருவமான
மனிதனே..
பொய்தானே
உன்
வாழ்க்கைத் தத்துவம்..!
- ப.ஜார்ஜ்.M.Sc.D.T.Ed
- கவிதை.
பாழும்
வயிற்றை நிரப்ப
வேகாத வெயிலில்
வேகும் கூத்துக்களை
ஆடும் கழைக்கூத்தாடியின்
ஆட்டமெல்லாம் தத்துவம்..!
ஆயிரமாயிரம் பூக்களில் பயணித்து
வில்லாய் வளைந்து விழும்
சொட்டுத்
தேன் எடுத்தாலும்
கட்டித்தேன் என்பது தேனீக்களின் தத்துவமே..!
தரைக்கே வராமல்
காற்றோடு கலந்தும்..
பூமியோடு கரைந்தும்..
ஒளி தரும் நிலவின்
அழகோ
தத்துவம்..!
கண்ணுக்குப் புலனாகாமல்
எங்கோ உருவாகி
கடலில் சங்கமிக்கும்
நதியின் பயணம் தத்துவமே..!
தெருப் புழுதியில்
வீடு கட்டி..
பால் காய்ச்சாமல்
குடிபுகும் கறையானின்
மண்வீடு
தத்துவமே..!
உலகின் பொய்யை உள்ளத்தில் சுமந்து..
பொய்யின் உருவம் கொண்டு..
புனிதத்தை மறைக்கும்
இருளின் உருவமான
மனிதனே..
பொய்தானே
உன்
வாழ்க்கைத் தத்துவம்..!
- ப.ஜார்ஜ்.M.Sc.D.T.Ed