எஸ்.பி. ஐ வாடிக்கையாளர்கள் எளிதாக இ.எம்.ஐ முறையில் பொருட்களைப் பெற புதிய டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கியில் புதிதாக இ.எம்.ஐ டெபிட் கார்டு
அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட
நகரங்களில் 40,000 க்கும் மேற்பட்ட கடைகளில் 4.5 லட்சம் ரூபாய் வரையில்
நீங்கள் இ.எம்.ஐ மூலமாக பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பரிவர்த்தனை முடிந்த
ஒரு மாதத்திற்குப் பிறகு தவணைகள் தொடங்கும். வங்கிக்கணக்கில் முறையான நிதி
இருப்பு மற்றும் பணப்பரிவர்த்தனை வைத்திருப்பவர்கள் இந்த வசதியை
பயன்படுத்திக் கொள்ளலாம்.
எஸ்.பி.ஐயின் இந்த வசதியைப் பெற ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
நீங்கள் வங்கிக்கிளையை அணுக வேண்டிய தேவையில்லை. மேலும்,
பூஜ்ஜிய செலவில் இ.எம்.ஐயில் இந்த டெபிட் கார்டு மூலமாக பொருட்களை
வாங்கிக்கொள்ளலாம்.
தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி
வரும் எஸ்.பி.ஐ, இந்த இ.எம்.ஐ டெபிட் கார்டு மூலமாக வாடிக்கையாளர்கள் பலர்
பயன்பெறுவர் என்று தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் எளிதாக இந்த
வசதியை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய சேவை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...