போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு மிரட்டல் விடுவதை கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவி வரும் சூழலில் , அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப, மருத்துவக் கல்வி, ஆரம்ப சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நோட்டீஸைப் பெற்றுக் கொண்டு பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த நடவடிக்கை பற்றிய அறிக்கையை அரசுக்கு அனுப்பவும் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு மிரட்டல் விடுவதை கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...