பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச பணிக்காலம் 3 ஆண்டுகள் என்ற அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்குத் தொடுத்ததன் பேரில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து,
🔥
🛡 2019-20-ம் கல்வியாண்டிற்கான கலந்தாய்வு விதிமுறைகளில் பெயருக்கு ஈயம் பூசி திருத்த அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை.
🔥
🛡 அதாவது அரசாணையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது யாரெல்லாம் வழக்கு தொடுத்தார்களோ அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡 2019-20-ம் கல்வியாண்டிற்கான கலந்தாய்வு விதிமுறைகளில் பெயருக்கு ஈயம் பூசி திருத்த அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை.
🔥
🛡 அதாவது அரசாணையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது யாரெல்லாம் வழக்கு தொடுத்தார்களோ அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡 இதன்படி, பணி நிரவல் / பதவி உயர்வு காரணமாக இறுதியாகப் பணியேற்ற பள்ளியில் ஓராண்டு பணிக்காலத்தை நிறைவு செய்யாததால் 2017-18 & 2018-19 கல்வியாண்டிற்கான கலந்தாய்வுகளில் கலந்து கொள்ள இயலாமல் இருந்த ஆசிரியர்களில்,
🔥
🛡 WP(MD)14188/2019, WP18146/2019 & இது சார்ந்த தொகுப்பு வழக்குகளின் கீழ் வழக்குத் தொடுத்த, அவ்வழக்குத் தீர்ப்பாணைகளின் படி விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களுக்கு மட்டும்,
🔥
🛡 3 ஆண்டுகள் என்ற பணிக்கால உச்சவரம்பைத் தளர்த்தி, இவ்வாண்டே கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இத்திருத்தம் இவ்வாண்டிற்கு மட்டுமே.
🔥
🛡 அப்படியானால், மேற்கண்ட கல்வியாண்டுகளில் பணிநிரவல் / பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களில் வழக்குத் தொடுக்காதவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
🔥
🛡 இவர்களில் யாரேனும் சிலர் இந்த அரசாணையையும் எதிர்த்து வழக்குத் தொடர முற்பட்டால் கலந்தாய்வு மீண்டும் தள்ளிப் போகலாம்.
🔥
🛡 பொதுவான பணிசார் பிரச்சினைகளில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையிலாவது அப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோரை முழுமையாகக் கவனத்தில் கொண்டு அனைவருக்கும் நீதி கிடைக்குமாறு விதிமுறைகளை வகுப்பதே சிறந்த நிர்வாகமாக இருக்கக் கூடும்.
🔥
🛡 இல்லையென்றால், நீதிமன்றப் படியேற நிதியாதாரம் இல்லாதோர் நாதியற்றோராகவே இருப்பர். மேலும், நிதியாதாராம் உள்ளோரால் நீதிமன்றங்களில் பதியப்படும் பணி சார் வழக்குகளின் மிகுதியால் சாமானியர்களின் வழக்குகளும் பாதிக்கப்படக்கூடும்.
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
(குறள் 541 : செங்கோன்மை)
🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм