சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மாதிரி பள்ளியில் பணிபுரியும் கணிதப்பாட பட்டதாரி ஆசிரியர் திரு.சரவணன் அவர்கள் அஞ்சல் தலை,நாணயம்,ரூபாய் நோட்டு சேகரிப்பு பழக்கத்தை தன் பொழுது போக்காக மட்டுமல்லாமல் மிகவும் பயனுள்ள வகையில் செய்து வருகிறார்.பல்வேறு காலக்கட்ட அஞ்சல் உறை,இன்லேண்ட் கடிதம்,விளம்பர அஞ்சல் அட்டை, பல்வேறு காலங்களில் வெளியான அஞ்சல் தலைகளை சேகரித்து வைத்துள்ளார்.இந்தியாவில் இதுவரை வெளியான பல்வேறு விதமான நாணயங்கள்,ரூபாய் நோட்டுகள் சேகரித்து வைத்துள்ளார்.அச்சுப்பிழைகளோடு சில நேரங்களில் வெளியான ரூபாய் நோட்டுகளையும் வைத்துள்ளார். தலைவர் களின் பிறந்த தின எண்களை கொண்ட நோட்டுகளையும் வைத்துள்ளார். காந்தியடிகளின் பிறந்த தினத்திற்கு பல்வேறு நாடுகள் வெளியிட்ட நூல்கள்,அஞ்சல். தலைகளையும் சேகரித்து வைத்துள்ளார்.
ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சியின் போது இடைவேளைகளில் தன் சேகரிப்புகளை காட்டி விளக்கி கூறி உற்சாகப்படுத்துகிறார்.மாணவர்களுக்கும் ஆர்வமூட்டி சேகரிப்பு பழக்கத்தை ஏற்படுத்துகிறார். கல்வியோடு பொழுது போக்கு பழக்கத்தையும் பயனுள்ளதாக்குகிறார். அவருடைய பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளும். பாராட்டுகளும்.தன்னுடைய
அஞ்சல் தலை,நாணயம் சேகரிப்பை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கண்காட்சி வைத்து விளக்கி கூறவும் தன்னை அழைக்கலாம் என சேவை மனப்பான்மையோடு செய்ய தயார் கூறியுள்ளார் அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
தொடர்புக்கு:
திரு.சரவணன்
பட்டதாரி ஆசிரியர் ( கணிதம்),
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
மகுடஞ்சாவடி வட்டாரம்,சேலம் மாவட்டம்.
செல்லிடப்பேசி எண்:98429 74290
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...