
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மாதிரி பள்ளியில் பணிபுரியும் கணிதப்பாட பட்டதாரி ஆசிரியர் திரு.சரவணன் அவர்கள் அஞ்சல் தலை,நாணயம்,ரூபாய் நோட்டு சேகரிப்பு பழக்கத்தை தன் பொழுது போக்காக மட்டுமல்லாமல் மிகவும் பயனுள்ள வகையில் செய்து வருகிறார்.பல்வேறு காலக்கட்ட அஞ்சல் உறை,இன்லேண்ட் கடிதம்,விளம்பர அஞ்சல் அட்டை, பல்வேறு காலங்களில் வெளியான அஞ்சல் தலைகளை சேகரித்து வைத்துள்ளார்.இந்தியாவில் இதுவரை வெளியான பல்வேறு விதமான நாணயங்கள்,ரூபாய் நோட்டுகள் சேகரித்து வைத்துள்ளார்.அச்சுப்பிழைகளோடு சில நேரங்களில் வெளியான ரூபாய் நோட்டுகளையும் வைத்துள்ளார். தலைவர் களின் பிறந்த தின எண்களை கொண்ட நோட்டுகளையும் வைத்துள்ளார். காந்தியடிகளின் பிறந்த தினத்திற்கு பல்வேறு நாடுகள் வெளியிட்ட நூல்கள்,அஞ்சல். தலைகளையும் சேகரித்து வைத்துள்ளார்.
ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சியின் போது இடைவேளைகளில் தன் சேகரிப்புகளை காட்டி விளக்கி கூறி உற்சாகப்படுத்துகிறார்.மாணவர்களுக்கும் ஆர்வமூட்டி சேகரிப்பு பழக்கத்தை ஏற்படுத்துகிறார். கல்வியோடு பொழுது போக்கு பழக்கத்தையும் பயனுள்ளதாக்குகிறார். அவருடைய பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளும். பாராட்டுகளும்.தன்னுடைய
அஞ்சல் தலை,நாணயம் சேகரிப்பை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கண்காட்சி வைத்து விளக்கி கூறவும் தன்னை அழைக்கலாம் என சேவை மனப்பான்மையோடு செய்ய தயார் கூறியுள்ளார் அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
தொடர்புக்கு:
திரு.சரவணன்
பட்டதாரி ஆசிரியர் ( கணிதம்),
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
மகுடஞ்சாவடி வட்டாரம்,சேலம் மாவட்டம்.
செல்லிடப்பேசி எண்:98429 74290