கல்வி’’ என்பது அழியாத செல்வம். ‘’கல்வி’’ கற்பதன் முலம் நாம் புதுப்புது விஞ்ஞானச் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.
பலப் பல பட்டம் பெறுவது மட்டும் கல்வி அல்ல... நம் அறிவை பெருக்குவதற்கும், வாழ்க்கை நிலையையும் உயர்த்துவதோடு பொருளாதார நிலைமையும் உயர்த்துகின்றது கல்வி ஒன்றே..
மனிதனின் மிகப் பெரிய சொத்து கல்வி. கற்ற மனிதனே முழுமையான மனிதனாவான்.
கல்வி நமக்கு நல்வழி காட்டும் கல்வி கற்றால் வாழ்க்கை சிறக்கும்.. இதுவே வாழ்க்கையின் நியதி..
பலப் பல பட்டம் பெறுவது மட்டும் கல்வி அல்ல... நம் அறிவை பெருக்குவதற்கும், வாழ்க்கை நிலையையும் உயர்த்துவதோடு பொருளாதார நிலைமையும் உயர்த்துகின்றது கல்வி ஒன்றே..
மனிதனின் மிகப் பெரிய சொத்து கல்வி. கற்ற மனிதனே முழுமையான மனிதனாவான்.
கல்வி நமக்கு நல்வழி காட்டும் கல்வி கற்றால் வாழ்க்கை சிறக்கும்.. இதுவே வாழ்க்கையின் நியதி..
படித்தால் சுயமாய் சிந்திக்க முடியும். நன்மை எது தீமை எது எனத் தெரியப்படுத்தும்.
அமெரிக்காவில் ஒரு ஏழைத் தொழிலாளியின் மகனுக்குப் புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். ஆனால் புத்தகம் வாங்குவதற்கு உண்டான பணம் இல்லை
அவன் தந்தையோ மிகுந்த ஏழை. அவரால் எப்படி இதற்கு எல்லாம் செலவு செய்ய முடியும்.?
அவனோ புத்தகம் படிக்கும் ஆசையில் வெகுதுாரம் சென்று பலரைக் கெஞ்சிக் கேட்டு புத்தகங்கள் வாங்கி வருவான்.
ஒருநாள் அவன், ‘அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன்’ பற்றிய புத்தகத்தைப் படித்து வந்தான். உறக்கம் வரவே, புத்தகத்தை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டான்.
அன்று பெய்த மழையில் அப்புத்தகம் நனைந்து விட்டது. ஐயோ! இதன் உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது?’’ என்று தவித்தான்..
பின் ‘‘ஐயோ! இந்தப் புத்தகம் எனது அஜாக்கிரதையால் நனைந்து விட்டது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.’’ என்று கேட்டுக் கொண்டான்.
அப்படியானால் நீ என் வயலில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்’’ என்றார்..
.
‘சரி! அப்படியே செய்கிறேன். ஆனால் தாங்கள் இந்தப் புத்தகத்தை எனக்கே தர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டு வேலையைச் செய்து முடித்து விட்டு அப்புத்தகத்தைப் பெற்றுச் சென்றான்.
இப்படிப் புத்தகத்தை வாங்கிப் படித்த அச்சிறுவன் தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் திகழ்ந்தார்..
ஆம்! அடிமைத் தளையை அறுத்து எறிந்த ஆபிரகாம் லிங்கன் தான் அந்த சிறுவன்.. அவனது நுாலறிவு அவனை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருந்தது..
ஆம்.,நண்பர்களே..,
உங்கள் குழந்தைகள் அவர்கள் விரும்பிய பாடம் படிக்கட்டும். அவர்கள் விருப்பபடி படிக்கட்டும் எனப் பெற்றோர்கள் முடிவெடுக்கும் உரிமையைத் தர வேண்டும்.
படிப்பு என்பது ஒரு திறவுகோல் மட்டுமே. உங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள்.
மதிப்பெண் மட்டும் கல்வி இல்லை. என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
படித்தவர் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் இல்லை. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் பல பேர் நன்கு படித்தவர் இல்லை.
உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர எதிரியாக இருக்காதீர்கள்..
மாணவர்களின் வசந்த காலத்தை இறந்த காலமாய் ஆக்கி விடாதீர்கள்.🌺🙏🏻
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...