மகாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இளைய மகனான தீரஜ் தேஷ்முக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனாவின் ரவி ராம்ராஜே தேஷ்முக் போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் 'நோட்டா' என்னும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்னும் பட்டனை வாக்கு எந்திரத்தில் 27,449 பேர் பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சியை பின்னுக்கு தள்ளி நோட்டா' இரண்டாம் இடம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.








