தூக்கமின்மையால் ஞாபக மறதி அதிகமாகுமா?. தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னவென்று பார்ப்போமா!
Insomnia :
தூக்கமின்மை ஏற்படக்கூடும் :
☆ போதுமான அளவுக்குத் தூங்க இயலாமையே தூக்கமின்மைக் கோளாறு என அழைக்கப்படுகிறது.
☆ நமது மூளையில் பட்டாணி அளவில் இருக்கும் பினியல் சுரப்பியானது மெலட்டோனின் என்னும் சுரப்பியை சுரக்கிறது.
இவையே தூக்கம் வருவதற்கு காரணமாக அமைகிறது. இவை பகல் நேரத்தில் சுரக்காது, இரவில் வெளிச்சம் இல்லாத போது மட்டுமே சுரக்கும்.
☆ இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, கவனக் குறைவு, ஞாபக மறதி, கண் எரிச்சல்,
சோர்வு, தலைசுற்றல், தொடர்ச்சியான கொட்டாவி, மயக்கம், செரிமான கோளாறு, வாத
கோளாறு அதிகமாகும். அதே போல் கற்பதிலும் ஆர்வம் குறைந்து விடும்.
☆ ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு
எலும்புகள் வலுவாக பாதிக்கிறது. எலும்பில் மினரல்ஸ் அளவு குறைவாக
இருக்கும். இதனால் எலும்பு வலுவிழந்து காணப்படும்.
☆ தூக்கமின்மை வர காரணங்கள்:
இதய நோய்கள், ஆஸ்துமா, நீடித்த நெஞ்சடைப்பு நோய் போன்ற சுவாச நோய்கள்.
☆ அல்சைமர், பார்க்கின்சன் நோய் போன்ற நரம்பு நோய்கள்.
☆ தைராயிடு மிகைச்செயல்பாடு போன்ற இயக்குநீர் பிரச்சினைகள் கீல்வாதம் போன்ற மூட்டு, தசைப் பிரச்சினைகள்.
☆ மயக்க நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தூக்க நோய்கள்.
☆ அதிகமாக காஃபைன் எடுப்பதும் தூக்க முறையைப் பாதிக்கிறது.