தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் சா.சேதுசெல்வம் விடுத்துள்ள அறிக்கை
சமூக அறிவியல் 10-ம் வகுப்பு வினாத்தாள் குழப்பம் -குளறுபடி மாணவர் - ஆசிரியர் - பெற்றோர் அச்சம்💐💐💐💐💐🙏
*10-ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பொது ஆண்டுத் தேர்வுக்கு - 2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி தமிழக தேர்வுத்துறையால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள் அமைப்பின் படி காலாண்டுத் தேர்வு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு -தேர்வு நடைபெற்றது.
அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் வடிவம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புது வடிவில் வடிவமைக்கப்பட்டது
காலாண்டுத் தேர்வில் கேட்கப்பட்ட பொருத்துக 10-
மதிப்பெண் மற்றும் தலைப்பின் கீழ் வினா 8 மதிப்பெண் இடம்பெறவில்லை.
பொருத்துகவிற்கு பதிலாக விரிவான விடைவினா 2 ம் -சமூக அறிவியல் 10-ம் வகுப்பு வினாத்தாள் குழப்பம் -குளறுபடி மாணவர் - ஆசிரியர் - பெற்றோர் அச்சம்💐💐💐💐💐🙏
*10-ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பொது ஆண்டுத் தேர்வுக்கு - 2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி தமிழக தேர்வுத்துறையால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள் அமைப்பின் படி காலாண்டுத் தேர்வு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு -தேர்வு நடைபெற்றது.
அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் வடிவம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புது வடிவில் வடிவமைக்கப்பட்டது
காலாண்டுத் தேர்வில் கேட்கப்பட்ட பொருத்துக 10-
மதிப்பெண் மற்றும் தலைப்பின் கீழ் வினா 8 மதிப்பெண் இடம்பெறவில்லை.
தலைப்பின் கீழ் வினா 8
மதிப்பெண்க்கு பதில் விரிவான விடை 1-ம் கேட்கப்பட்டது.
மாநில தேர்வுத்துறையால் தயாரித்த மாநிலம் தழுவிய அரையாண்டு சமூக அறிவியல் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் தேர்வுக்கு முன்பே வெளியாகி விட்டது.
இதனால் - 23.12.19 சிவகங்கை - நாமக்கல் - திருநெல்வேலி - மாவட்டங்களில் காலாண்டு முறையில் பழைய வினாத்தாள் வடிவில் தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் புதிய வடிவமைப்பின் படி தேர்வு நடைபெற்றது.
9.1.2020 ல் முதல் சிறப்புத் தேர்வு சிவகங்கை, இராமநாதபுரம் - ஈரோடு , திண்டுக்கல், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பழைய முறையில் காலாண்டுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் - பொருத்துக - தலைப்பின் கீழ் வினா இடம் பெற்றது.
சிவகங்கை மாவட்ட மாணவர்கள் புதிய மாதிரி வினாத்தாளை இன்று வரை பார்க்க வாய்ப்பளிக்கப்பட இல்லை.
இதனால் - 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கும் கிராமப்புற மாணவர்களும்- தயார் படுத்தும் ஆசிரியர்கள் - பெற்றோர் அச்சத்திலும்
உள்ளனர்.
ஆகவே மாணவர் நலன் கருதி.குழப்பம் தீர தமிழக தேர்வுத்துறை - இவ்வாண்டு பொதுத் தேர்வுக்கு ஏற்கனவே வெளியிட்ட மாதிரி வினாத்தாள் - காலாண்டு வினாத்தாள் வடிவமைப்பில் தேர்வு நடத்தி தேவையற்ற குழப்பத்தையும்- அச்சத்தையும் தவிர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக் குழப்பத்தினால் மாநிலம் முழுவதும் மாணவர்கள் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி குறைந்திருக்கிறார்கள்.
முறையான முன்னறிவிப்பு செய்து - புதிய வினாத்தாள் வடிவமைப்பின் படி பயிற்சி அளித்து மாணவர்கள் அச்சத்தை போக்கிட தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாநில அளவில் ஒட்டுமொத்த _ மாணவர்கள் - ஆசிரியர்கள் - பெற்றோர் கருத்து .
இக் குழப்பம் தொடரும் பட்சத்தில் மாநில அளவில் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி குறைய வாய்ப்புள்ளது.
தமிழக தேர்வுத்துறை மாணவர் நலன் காக்க கனிவுடன் முனைந்து செயல் பட வேண்டுகிறோம்.
என அவ்வறிக்கையில் தமிழகத் தேர்வுத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...