குழந்தைகளைப் பாராட்டுங்கள் அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு வாழ்வில் சிறந்தவராவார்கள்.
மனைவியைப் பாராட்டுங்கள் அவர் இன்னும் அன்பாக நடந்து கொள்வார்
கணவனைப் பாராட்டுங்கள் குடும்பத்திற்காக இன்னும் அக்கறையுடன் உழைப்பார்
உறவினர்களைப் பாராட்டுங்கள் சுற்றம் பெருகும் உதவிகள் உயரும்
நண்பர்களைப் பாராட்டுங்கள் உண்மையான நட்பு பெருகும். உங்களுக்காக எதையும் செய்ய முன் வருவார்கள்.
மாணவர்களைப் பாராட்டுங்கள் அவர்கள் இன்னும் திறமையானவர்களாக ஜொலிப்பார்கள் மனைவியைப் பாராட்டுங்கள் அவர் இன்னும் அன்பாக நடந்து கொள்வார்
கணவனைப் பாராட்டுங்கள் குடும்பத்திற்காக இன்னும் அக்கறையுடன் உழைப்பார்
உறவினர்களைப் பாராட்டுங்கள் சுற்றம் பெருகும் உதவிகள் உயரும்
நண்பர்களைப் பாராட்டுங்கள் உண்மையான நட்பு பெருகும். உங்களுக்காக எதையும் செய்ய முன் வருவார்கள்.
ஊழியர்களைப் பாராட்டுங்கள் இன்னும் அதிகம் உண்மையாக உழைப்பார்கள்.
உங்களை விட உயர்ந்தவர்களைப் பாராட்டுங்கள் உங்களைப் பற்றிய நன்மதிப்பு உயரும்.
கண்ணாடி முன் நின்று உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்ளுங்கள் தன்னம்பிக்கை பெருகும்.
மனதிலேயே உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள் மகிழ்ச்சிப் பெருகும் , சுறுசுறுப்புக் கூடும்
நாமளா கேட்டா ஓசியில் யாராவது பாராட்டுவார்களா?
எதிர்பார்ப்பு இருக்கும் அல்லவா அப்ப செல்வம் குறையத் தானே செய்யும்.
எதிரிகள் நம்மை உள்நோக்கத்துடன் பாராட்டினால் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
படைப்பாளிகளைப் பாராட்டுங்கள், சாதனையாளர்களைப் பாராட்டுங்கள்,
சமூகத்திற்காக தன்னலம் கருதாது உழைப்பவர்களைப் பாராட்டுங்கள்
எல்லாம் முடியவில்லை என்றால் தினமும் 5 பேரையாவது பாராட்டுங்கள்.
உங்களுக்கும் உங்களால் பாராட்டப்பட்டவருக்கும் மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும்.
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும்.
ஒவ்வொரு தனிமனிதனின் ஒழுக்கமே ஒட்டுமொத்த சமூகத்தின் ஒழுக்கம்
எனவே நல்ஒழுக்கமுடன் வாழ்வோம்.
வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம்.
பெண்களை மதிப்போம்.
100% கல்வி அறிவு பெற்ற மாநிலமாக உயரக் கற்போம் கற்பிப்போம்