அமுதம் புக் ஷாப் வழங்கும் சிறந்த பெண்ணியம் நூலின் சில வரிகள்
ஆண் பெண் இருபாலரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஓர் அற்புதமான அறிவார்ந்த நூல் என்றால் மிகையல்ல!
பெண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எதையெல்லாம் எந்தெந்த காலங்களில் கற்றுக் கொடுப்பது...?
சமூகத்தில் வாழ்வில் எதை எப்படி தேர்ந்தெடுப்பது..?
என்பதை எல்லாம் வாசிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும்
எளியநடையில்...
ஆண் பெண் இருபாலரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஓர் அற்புதமான அறிவார்ந்த நூல் என்றால் மிகையல்ல!
பெண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எதையெல்லாம் எந்தெந்த காலங்களில் கற்றுக் கொடுப்பது...?
சமூகத்தில் வாழ்வில் எதை எப்படி தேர்ந்தெடுப்பது..?
என்பதை எல்லாம் வாசிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும்
எளியநடையில்...
பெண்ணின் அருமை பெருமைகளை ஏறத்தாழ 190 பக்கங்களில் சத்தான முத்தான முப்பது கட்டுரைகளில்
முத்திரை பதித்துள்ளார் நூலாசிரியரிர் ஜோதி நிர்மலாசாமி ஐ ஏ எஸ். அவர்கள்!
சொல், செயல், நடைமுறைகள் என அனைத்திலும் தன் தாயையே பிரதி எடுக்கின்றனர் குழந்தைகள்!
எனவே பிரதி எடுக்கும் பிரதான சான்று பிழையின்றி சிறப்பானதாக இருத்தல் மிக அவசியம் என்கிறார் நூலாசிரியர்!
முதல் தகவல் தொடர்பான தாய் மொழியை இனிமையாக கொண்டதாக சமூகத்தில் இணக்கத்துடன்...
கூடிய நிறை வாழ்க்கை வாழ வகை செய்யும் வழியில் தகை சான்று கட்டுரையில் குழந்தை வளர்ப்பை அழகுற பதிவு செய்துள்ளார்!
சதா தங்கத்தில் மோகம் கொள்ளும் இன்றைய பெண்களுக்கு தங்கமான யோசனையும் சொல்லி இருக்கிறார்!
எட்டும் அறிவினுக்கு இணையாக அமைய இம்மியளவும் அருகதையற்ற தங்கத்தை....?
தேவையான அளவைவிட அதிகமாக சேகரிப்பது, பயன்படுத்துவது அவசியம் களையப்பட வேண்டிய ஒன்று என புரிய வைக்கிறார் நூலாசிரியர்!
சேகரிப்பை மாட்டி நகைக்கடையாக காட்டி மக்கள் மத்தியில் வலம் வருவது நகைப்புக்குரிய விசயம் என குட்டு வைக்கிறார்!
அறிவார்ந்த பெண்களாய் நம்மை மாற்றி நாம் பெற்ற அறிவால் தங்கத்தை விட தரம் மிளிர்வோம் வாருங்கள் என அறைகூவல் விடுகிறார்!
கற்றோர் பலர் கூடும் கண்ணிய சபையில் நகைகளுக்கு என்றுமே மரியாதை கிடைப்பதில்லை என்பதை தெளிவாக சொல்கிறார் நூலாசிரியர்!
கற்ற கல்விக்கும் அறிவுக்கு மட்டுமே மரியாதை!!
திருமண விழாக்களுக்கு இருப்பதை அனைத்தையும் அள்ளி போட்டு வரும் சிறுபிள்ளை தனமான போக்கை உடனடியாக மாற்றப் பட வேண்டும் என அன்பான வேண்டுகோள் வைக்கிறார்!
இளவயதில் இளைஞர்கள் பெண்களை பார்ப்பதும், பெண்கள் ஆண்களை ரசிப்பதும், பழகத் துடிப்பதும்....
இந்த காலகட்டத்தில் ஆண் / பெண்களைப் பற்றிய புரிதல் இருவருக்கும் எவ்வாறு இருக்க வேண்டும்...?
என்பதை அற்புதமான வழி முறைகளை சுட்டிக் காட்டுகிறார்! இளமையின் பதிவுகள் உடலிலும், மனதிலும் எழுவது, பெண்களிடம் ஈர்க்கப்படுவது இயற்கையான ஒன்றே என்கிறார்!
இந்த உணர்வு தான் மனித குலத்தையே தழைக்கச் செய்கிறது என்கிறார் நூலாசிரியர்!
இரு பாலருக்கும் இது பொதுவானது என்றாலும்...
இந்த காலகட்டத்தில் நடந்து கொள்ள வேண்டிய வழி முறைகளில் கண்ணியம் மிக மிக அவசியம் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்!
சொல்ல வேண்டிய விசயங்களை அழுத்தம் திருத்தமாக மதித்திடுவாய் மகனே என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்!
இதைவிட நாகரீகமாக நளினமாக இளையதலைமுறைக்கு யாரும் சொல்லிட முடியாது!
ஒவ்வொரு ஆண்மகனும் அவசியம் வாசிக்க வேண்டிய வைர வரிகள்!
இப்படியே தமிழ் கூறும் நல்லுலகிற்கு முப்பது முக்கியமான செய்திகளை பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்!
அவசியம் அனைவரும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல்....
பெண்ணாக பிறந்ததால் பெறாதது ஏதுமில்லை!
அவள் பொன்னான கைகள் படாது ஏதும் மிளிர்வதில்லை என அழகுற குறிப்பிடுகிறார்!
கண்ணாகப் போற்றுவது நேர்மையின்றி வேறு எதுவும் இல்லை!
கடமைக்கும் உரிமைக்கும் அவளிடத்தில் என்றும் சமரசம் இல்லை என்கிறார்!
இந்த கட்டுரையில் பயணிக்கும் பெண்ணானவள் தன் உரிமைகளோடு கடமைகளையும் உணர்ந்தவள் தன்னால் எதுவும் முடியும் என்ற தைரியம் கொண்டவள் என்கிறார்!
நேர்மையின் திறத்தால் வலிமை பெற்றவள்! அறிவை பெருக்கி ஆற்றல் வளர்ப்பவள்! மயக்கும் திசைக்கு எதிர் திசையில் பயணித்து தன் குடும்பத்தையும் காப்பவள்!
சக மனிதரை மதிக்கும் மாண்பினை பெற்றவள்! பொறாமை பொய் வார்த்தை புறந்தள்ளி இரக்கம் காட்டி மனிதம் வளர்ப்பவள்!
சுயமரியாதை கைக்கொண்டு சொந்தமாக முடிவெடுத்து பயமின்றி வாழ பழக்கம் கொண்டவள்!
இவள் இன்றி அமையாது உலகு! தன் பெண் குழந்தை இவளைப் போல் இருக்க வேண்டும்!
என இதனை வாசிக்கும் வாசகிகள் ஒரு நூறு பேராவது சமூகத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் மிளிர்ந்தால்...
அதுவே மிகப்பெரிய வெற்றி என அறைகூவல் விடுகிறார்!
நிறைவாக இந்நூல் ஏதேதோ அறிவுப்பூர்வமாகசொல்ல துடிக்குது!
வாசிக்க வேண்டிய நேசிக்க வேண்டிய பாதுக்காக்க வேண்டிய, சக தோழமைகளுக்கு பரிசளிக்க வேண்டிய பொக்கிஷம் என்றால் மிகையல்ல!
புத்தகங்கள் அறிவின் வாசலை திறக்கும் காலக் கண்ணாடிகள்!
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...