நோய் வராமல் தடுக்க பாதுகாப்பு முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
சென்னை: பாதுகாப்பு முறைகள்... வெயில் மற்றும் குளிர் காலங்களில் நோய்கள்
வராமல் தடுக்க பாதுகாப்பு முறைகளை கையாள்வதன் மூலம் நம்மை நாம்
பாதுகாத்துக்கொள்ள முடியும்.
சற்றே குளிர் தெரிகின்றது. நமக்கு வெயிலில் அதுவும் கடும் வெயிலில்
சுக்காய் காய்ந்தே பழகி விட்டது. சற்று நல்ல சீசன் என்றால் உடம்புக்கு
ஒத்துக் கொள்ளாது. சட்டென ஜலதோஷம், மூக்கடைப்பு, தொண்டைவலி, ஜூரம் என வந்து
விடும்.
ஏனெனில் இத்தகைய தாக்குதல்களை கொடுக்கும் கிருமிகளை எதிர்க்கும் சக்தி
பலருக்கு குறைவே. ஆனால் சில தவிர்ப்பு, பாதுகாப்பு முறைகளை கையாள்வதன்
மூலம் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
கைகளை சோப்பு கொண்டு சுத்தமாகக் கழுவுங்கள்.
20 நொடிகள் தேய்த்துக் கழுவுங்கள். கோடை காலமோ, குளிர்காலமோ, மழை காலமோ
எல்லா காலங்களிலும் கைகளை சோப்பு கொண்டு கழுவுவது அவசியம். இதுவே அநேக
கிருமிகளைத் தவிர்த்துவிடும்.
பொதுவாகவே நம்ம ஊர் பழக்கமான கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறை மருத்துவ
ரீதியாக சிறந்தது. கை கொடுத்து குலுக்கிக் கொள்வது வைரஸ், பாக்டீரியா
கிருமிகள் எளிதாய் பரவ வழி செய்கின்றது.
இரவு நேரம் குளுகுளுவென நன்றாய் இருக்கின்றதே என்று இரவில் நெடுநேரம்
அமர்ந்து பேசுவது, சாப்பிடுவது என செலவழித்து தாமதமாக தூங்கச் செல்வார்கள்.
இரவு 2 மணி வரை அரட்டை அடிப்பவர்களும், டி.வி. பார்ப்பவர்களும் உண்டு.
இப்படி நேரம் கழித்து உறங்குபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து
விடுகின்றது. எனவே இவர்களை எளிதில் நோய் தாக்கும்.
இருமும் பொழுதும், தூங்கும் பொழுதும் வாய், மூக்கு இவற்றை சற்று பொத்தியது
போல மூடி இருமுவது கிருமிகள் எதிராளியினை தாக்காது இருக்கும்.
இது உங்களது சமுதாய சேவையாக இருக்க வேண்டும். ஆனால் வெறும் கைகளை
பயன்படுத்தாமல் டிஷ்யூ பேப்பர் கொண்டு வாயினை மென்மையாக பொத்தி இருமுவது
உங்கள் கைகளில் கிருமிகள் அள்ளிகொட்டுவதைத் தவிர்க்கும்.
மறக்காமல் அந்த டிஷ்யூ பேப்பரினை முறையாக நீக்கி விட வேண்டும்.
பொது கதவு பிடிகளை டிஷ்யூ உபயோகித்து திறப்பது நல்லது. இதெல்லாம்
சாத்தியமா? ஓவராக இல்லையா என்று நினைக்கலாம். பாதுகாப்பு வழிகளில் இவையும்
ஒன்று.
கை குட்டை உபயோகிக்கிறேன் என்ற பெயரில் அதனை தரை துடைக்கும் துணியினை விட
மோசமாக அழுக்காக கழுத்துப் பட்டையில் வைத்து நோய் கிருமிகளின் ஏஜண்டாக
செயல்படுவதினைக் காட்டிலும் டிஷ்யூ பேப்பர்கள் மிகவும் சிறந்ததே.
சுகாதாரமற்ற கைளைக் கொண்டு முகத்தினை தொடாதீர்கள். மூக்கு, கண், வாய்
இவற்றில் எளதில் கிருமிகள் புகுந்து விடும். கிருமி நாசினி திரவம் சிறிய
அளவில் கிடைக்கின்றது. அதனை கையில் அவ்வப்போது தடவிக் கொள்ளுங்கள்.
Know safety measures to prevent disease from spreading: Safeguarding ...
We can protect ourselves by protecting
ourselves from diseases during the hot and cold weather. Looks somewhat
cool. We have got used to the sun and the heavy sun. A good season is
not good for the body. Sudden colds, nasal congestion, sore throat, and
rash
This is because many people lack the power to resist such attacks. But we can protect ourselves by dealing with some exclusion and security measures. Wash hands thoroughly with soap.
Wash and wash for 20 seconds. Wash your hands with soap at all times during the summer, winter or rainy season. This will eliminate many germs. Usually, our customary hand-waving greeting is medically better.
Shaking hands is an easy way to spread
the virus and bacterial germs. They sleep late at night, talking about
eating, saying they are good at night. There will be chats and TV shows
until 2pm.
There are those who watch. After this
time, the immunity of the sleepers is reduced. So they can easily get
infected. The mouth and nose may be covered with coughing while the
coughing and sleeping do not strike the opponent.
This should be your community service.
But gently coating the mouth with tissue paper without using your hands
will prevent germs in your hands. Do not forget to properly remove the
tissue paper. It is better to open the public door bins using tissue.
Is this possible? You can think whether
or not. These are one of the ways of security. In the name of using hand
pins, tissue papers are much better than an anti-germ agent in a dirty
neck strap rather than a mop.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...