கோடை காலம் அருகில் வந்துவிட்டது. கோடை காலத்தை எதிர்கொள்ள நம் முன்னோர்கள் சில தயாரிப்புகள் செய்து வந்தார்கள். அவற்றில் முக்கியமானது வெப்பத்தை போக்க ஆரோக்கியமான குளிர்ச்சி தரும் உணவுகளை தயாரித்து உண்பது. அவற்றில் முக்கியமானவை கம்பங்கூழும் கேழ்வரகுக் கூழும்.
கம்பை வாங்கி கழுவி சுத்தப்படுத்தி வெயிலில் ஈரம் போகும் வரை காய வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
கேழ்வரகை அரைத்து மாவாக்கி தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். கூழ் தயாரிக்க அடி கனமான மண்சட்டியும், மர கரண்டி அல்லது புதிய மத்து தேவை. பரிமாறுவதற்கும் மண் கலங்கள் பயன்படுத்தினால் சிறப்பு. தயிர் ஊற்றி வைக்க கண்ணாடி பாட்டில் ஒன்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
- கம்பு 1 கப்
- தண்ணீர் 6 கப்
- தயிர் 2 கப்
செய்முறை :
சுத்தப்படுத்திய கம்பை தண்ணீரில் கழுவி காயவைத்து தேவைப்படும்போது ஒரு கப் கம்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 6 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் இந்த கரகரப்பான மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவேண்டும்.
10 முதல் 15 நிமிடத்தில் வெந்துவிடும். ஸ்டவ்வை ஆப் செய்து அதே பாத்திரத்தில் ஆற வைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் கழித்து நன்றாக கெட்டியாகி விடும். கெட்டியாக இருக்கும் கூழில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும். கலக்க வேண்டாம். 10 மணி நேரம் கழித்து தேவையான அளவு கூழை தயிர் கலந்து கரைத்து அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து ஊற்றி பருகவும்.
தேவையானவை
*கேழ்வரகு மாவு - 3 கப்
*பச்சரிசி நொய் - 1கப்
*சின்ன வெங்காயம்
*தயிர் - 2 கப்
*உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இரவு கேழ்வரகு மாவை 1 குழிக்கரண்டி தயிர், உப்பு கலந்து 3 பங்கு தண்ணீர் ஊற்றி 1 நாள் புளிக்க வைக்கவும்.
மறுநாள் இரவு தண்ணீர் கொதிக்கவைத்து பச்சரிசி நொய்யைக் வேக வைக்க வேண்டும். பின்னர் புளித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மரக்கரண்டியை திருப்பிவைத்து வைத்து கிளற வேண்டும். கையில் தண்ணீர் நனைத்து மாவை தொட்டு பார்த்தாள் ஒட்டாமல் வரவேண்டும். அதுவரை கிளறவேண்டும்.
காலை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து வெங்காயம் வைத்து சாப்பிடலாம். இல்லையென்றால், கார குழம்பு கருவாட்டு குழம்பு சேர்த்துக்கொள்ளலாம்.
கம்பை வாங்கி கழுவி சுத்தப்படுத்தி வெயிலில் ஈரம் போகும் வரை காய வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
கேழ்வரகை அரைத்து மாவாக்கி தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். கூழ் தயாரிக்க அடி கனமான மண்சட்டியும், மர கரண்டி அல்லது புதிய மத்து தேவை. பரிமாறுவதற்கும் மண் கலங்கள் பயன்படுத்தினால் சிறப்பு. தயிர் ஊற்றி வைக்க கண்ணாடி பாட்டில் ஒன்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
- கம்பு 1 கப்
- தண்ணீர் 6 கப்
- தயிர் 2 கப்
செய்முறை :
சுத்தப்படுத்திய கம்பை தண்ணீரில் கழுவி காயவைத்து தேவைப்படும்போது ஒரு கப் கம்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 6 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் இந்த கரகரப்பான மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவேண்டும்.
10 முதல் 15 நிமிடத்தில் வெந்துவிடும். ஸ்டவ்வை ஆப் செய்து அதே பாத்திரத்தில் ஆற வைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் கழித்து நன்றாக கெட்டியாகி விடும். கெட்டியாக இருக்கும் கூழில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும். கலக்க வேண்டாம். 10 மணி நேரம் கழித்து தேவையான அளவு கூழை தயிர் கலந்து கரைத்து அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து ஊற்றி பருகவும்.
தேவையானவை
*பச்சரிசி நொய் - 1கப்
*சின்ன வெங்காயம்
*தயிர் - 2 கப்
*உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இரவு கேழ்வரகு மாவை 1 குழிக்கரண்டி தயிர், உப்பு கலந்து 3 பங்கு தண்ணீர் ஊற்றி 1 நாள் புளிக்க வைக்கவும்.
மறுநாள் இரவு தண்ணீர் கொதிக்கவைத்து பச்சரிசி நொய்யைக் வேக வைக்க வேண்டும். பின்னர் புளித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மரக்கரண்டியை திருப்பிவைத்து வைத்து கிளற வேண்டும். கையில் தண்ணீர் நனைத்து மாவை தொட்டு பார்த்தாள் ஒட்டாமல் வரவேண்டும். அதுவரை கிளறவேண்டும்.
காலை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து வெங்காயம் வைத்து சாப்பிடலாம். இல்லையென்றால், கார குழம்பு கருவாட்டு குழம்பு சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...