ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது பாலப்படுக்கை கிராமம். இதனால் யானைகள் அடிக்கடி கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை வெளியேறியது. பின்னர் இந்த யானை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராமத்துக்குள் புகுந்த யானை, இதே பள்ளியின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியது. தற்போது மீண்டும் யானை அதே பள்ளியின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியின் சுற்று சுவரை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் காட்டு பன்றிகள் மற்றும் சிறுத்தைகள் பள்ளி வளாகத்தில் பதுங்கி கொள்ள வாய்ப்புள்ளது’ என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...