1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் உத்தரவு - செய்தி வெளியீடு ( 25.03.2020 ) : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் உத்தரவு - செய்தி வெளியீடு ( 25.03.2020 ) :

IMG-20200324-WA0006

மாண்புமிகு முதலமைச்சர் திரு . எடப்பாடி K . பழனிசாமி அவர்களின் செய்தி அறிக்கை - நாள் 25 . 3 . 2020

Screenshot_20200325_150837
Screenshot_20200325_150850

தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது . நேற்று ( 24 . 3 . 2020 ) மாலை 6 . 00 மணி முதல் , குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது . அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று ( 25 . 3 . 2020 ) எனது தலைமையில் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டது . இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் திரு . K . சண்முகம் , இ . ஆ . ப . அவர்களும் , காவல்துறை தலைமை இயக்குநர் திரு . திரிபாதி , இ . கா . ப அவர்களும் , சென்னை மாநகரக் காவல் ஆணையாளர் திரு . ஏ . கே . விஸ்வநாதன் , இ . கா . ப . அவர்களும் , பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு . தீரஜ்குமார் , இ . ஆ . ப அவர்களும் பங்கேற்றனர் . இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .

1 . 24.03.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் + 2 பொதுத்தேர்வு நடைபெற்றது . அத்தேர்வில் சில மாணவர்கள் , கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததை கனிவோடு பரிசீலித்து , 24 . 3 . 2020 அன்று + 2 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும் , இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன் .

2 . மேலும் , கொரோனா நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது . இதனால் , தமிழ்நாட்டில் 1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதித் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும் , மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் , 1 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டேன் .

3 . தேநீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிர்க்க , தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்குவதற்கு , இன்று ( 25 . 3 . 2020 ) மாலை 6 . 00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது .

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை - 9

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H