கொரோனா நிவாரண நிதியாக 1000 ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் எப்போது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு
உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளே இருந்து கொரோனா
பரவமால் இருக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரசு சார்பில்
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் தினக்கூலி தொழிலார்கள் உட்பட பலர்
தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் அன்றாட தேவைக்கு தமிழக அரசு
சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் அரிசி,
பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஏப்ரல் 2ம் தேதி முதல் 15ம் தேதிக்குள்
விநியோகிக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...