கொரோனா காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 15 ஆயிரம்
வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா
தாக்கம் காரணமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழல்
ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கூட ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க அதிபர்
டரம்ப் உத்தரவிட்டார். மேலும் வருமானம் இன்றி வீட்டில் இருக்கும் பொது
மக்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் கோரிக்கை
விடுத்திருந்தார்.

இந்நிலையில்
கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன்
அட்டைதாரர்களுக்கும் ரூபாய் பதினைந்தாயிரம் உதவி தொகையாக வழங்க வேண்டும்
என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.