அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமை ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் தலைமை
ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கவுன்சிலிங் முறையில் இடமாற்றம்
செய்யப்பட்டது.
கடந்த, 2019ல் நடத்தப்பட்ட கவுன்சிலிங்குக்கு பின், பள்ளிகளில் ஏற்பட்ட
காலியிடங்களில் பதவி உயர்வு மற்றும் புதிய நியமனங்கள் வழியாக, ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை துவங்கியுள்ளது.முதற்கட்டமாக, தலைமை ஆசிரியர்
பதவிக்கான காலியிடங்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.பள்ளி கல்வி
இயக்குனர் கண்ணப்பன் உத்தரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இந்த
பணியை மேற்கொண்டுஉள்ளனர்.
இந்த பணிகள் முடிந்ததும், காலியிடங்களில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமிப்பதா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் தலைமை ஆசிரியர் பதவி வழங்குவதா என்று முடிவு செய்யப்பட உள்ளது.