கொரோனா வைரஸ் பெரும்பாலும் ஒருவரிடம்
இருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் என்கிறார்கள்
மருத்துவ விஞ்ஞானிகள். பொருட்களை தொட்டால் அந்த வைரஸ் பரவுமா, பொருட்களின்
மீது அந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்றெல்லாம் உலகளவில்
ஆராய்ச்சியாளர்கள் விழுந்து விழுந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தண்ணீர் எடுத்துச்செல்கிற அட்டை பாட்டில் அல்லது கேன் மீது 24 மணி நேரம் இருந்து தொற்றும்.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் 3 நாட்கள் இருக்கும்.
எவர்சில்வர் தண்ணீர் பாட்டிலில் 3 நாட்கள் இருக்கும்.
காற்றில் 3 மணி நேரம் இருக்கும்.
காப்பர் (செப்பு) பாட்டில் மீது 4 மணி நேரம் இருக்கும்.
பாலிபுரோபிலின் பிளாஸ்டிக் மீது 16 மணி நேரம் இருக்கும்.
இதை
ஆராய்ந்து சொல்லி இருப்பவர், அமெரிக்காவில் ஹேமில்டன் நகரில் உள்ள ராக்கி
மவுண்டைன் பரிசோதனைக்கூடத்தின் வைரஸ் சூழலியல் துறையின் தலைவர் வின்சென்ட்
முன்ஸ்டர்.
எத்தனை நாட்கள் கொரோனா வைரஸ் உடலில் தங்கும்?
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் உடனடியாக சிகிச்சை பெறத்தொடங்கி
விடுகிறார்கள். அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும்கூட, கொரோனா
வைரஸ் வாழத்தான் செய்யும்.
லேன்செட் மருத்துவ இதழ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த வைரஸ் 8 முதல் 37
நாட்கள் வரை தொடர்ந்து உடலில் வாசம் செய்ய வாய்ப்பு உண்டு என்று தெரிய
வந்துள்ளது.
தும்மலா, இருமலா ஓடுங்கள்
கொரோனா வைரஸ் பாதித்த ஒருவரின் தும்மல் மற்றும் இருமலில் வெளிப்படுகிற
நீர்த்துளிகள் மூலம் மற்றவருக்கு இந்த கொரோனா வைரஸ் எளிதாக
தொற்றிக்கொள்ளும்.
இந்த நீர்த்துளிகள் பயணிக்க சாத்தியமான தூரம் எவ்வவளவு என்றால் 6 அடிகள்.
எனவே, ஒருவர் தும்மினால், இருமினால் அந்த இடத்தில் நிற்காதீர்கள். அங்கு
இருந்து 6 அடி தூரத்துக்கு அப்பாலே போய்விடுங்கள். அவருக்கு கொரோனா
இருக்குமா, இருக்காதா, நாம் இங்கே இருக்கலாமா, கூடாதா என்றெல்லாம் அந்த
நேரத்தில் போய் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காதீர்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...