ஒரு இராணுவ வீரனின் ஆதங்க கண்ணீர் பதிவு.!! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஒரு இராணுவ வீரனின் ஆதங்க கண்ணீர் பதிவு.!!

அப்போது நான் காஷ்மீரில் ஆர்சி பிக் என்ற மலைபகுதியில் பணியிலிருந்தேன் அது ஒரு ஐனவரிமாதம்..பனிபொழிவு அதிகமுள்ள சில மாதங்களில் அதுவும் ஒன்று...!

இந்த மாதிரி மாதங்களில் தரைவழி  போக்குவரத்து இருக்காது ரோடுகள் எல்லாம் பனிமூடி பாதை சீர்குலைந்து போக்குவரத்து மிக கடினமாகிவிடும்..!
ராணுவம் செய்யும் நல்ல சேவைகளில் ஒன்று பணி செய்பவர்களின் குடும்பத்தினருக்கும் ராணுவ மருத்துவ மனையில் மருத்துவம் பார்ப்பதுதான்....!

சென்னை மவுன்ட்டில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் என்து தந்தை நெஞ்சுவலிக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.!
அவரது நிலமை மோசமாக இருந்தது அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஆனால் அங்கு அந்த வசதியில்லாததால் ஜி எச்க்கு மாற்றம் செய்து அனுப்பிட்டு அங்கிருந்து எனது பட்டாலியனுக்கும் தகவல் அனுப்பிவிட்டனர்..!

அம்மாவும் கடிதம் எழுதியிருக் கின்றார்கள் தந்தியும் அனுப்பி இருக்கிறார்கள் ஆனால் ஏதும் என்னை வந்து சேரவில்லை காரணம் போக்குவரத்து பிரச்சனை...

தகவல் எனக்கு சொன்னால் நான் எப்படியும் மலையைவிட்டு கிழே இறங்க முயற்ச்சிப்பேன் அது எனக்கே ஆபத்தாகலாம் என்று நினைத்து சொல்லாமல் மறைத்துவிட்டனர்...!

அதிக பனிபொழிவால் வான் வழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது அதனாலும் நிலமை சீரானதும் சொல்லி விடுமுறை அனுப்பலாம் என்று உயரதிகாரிகள் நினைத்து விட்டனர்...!
என் நண்பன் மூலம் விசயத்தை கேள்விப் பட்டநான் அதிகாரிகளை கேட்க அவர்கள் உண்மைதான் கவலை வேண்டாம் நிலமை சரியானதும் அனுப்புகிறோம் அதுவரை ஒன்றும் ஆகாது கவலை வேண்டாம் என்று சொல்ல என் கவலை இன்னும் அதிகமானது அம்மா பாவம் இந்நிலமையில் என்ன கஷ்டப்படுவாரோ..?

அப்பாவின் முகத்தை கடைசியாக பார்க்க முடியுமா ? என்னால் நிம்மதியாக தண்ணீர்கூட குடிக்கமுடியவில்லை..!

நண்பனை கேட்டேன் தந்தி வந்து எவ்வளவு நாளாகிறது என்று கிட்டதட்ட ஒருவாரம் ஆகிறது ..இன்நேரம் என்ன நடந்திருக்குமோ என்னால் அதற்க்குமேல் தாங்க முடியவில்லை..என்ன நடந்தாலும் சரி மலையை விட்டு கிழே இறங்குவது என்று முடிவு செய்தேன்..!

ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை செங்குத்தான மலை சரிவில் ஐந்தாறு கிலோமீட்டர் கிழே இறங்கவேண்டும் பனியால் மேடுபள்ளங்கள் மூடியிருக்கும் பயணிப்பது என்பது தற்கொலை முயற்ச்சிதான்...!
அதைகூட துணிந்து செய்துவிடலாம் ஆனால் அனுமதி வாங்குவது என்பது ஏறகுறைய முடியாத விசயம் ..!ராணுவம் சுலபமாக வீரர்களை சாகவிடாது ஒவ்வொருவரும் முக்கியம்....!

மலையுச்சியில் எங்களுடன் சில காஷ்மீர் போலீசும் இருந்தது அவர்களும் வயர்லெஸ் சாதனங்கள் அமைத்திருந்தனர்..
ஒன்றாய் இருந்து ஒன்றாய் சாப்பிட்டு நல்ல நண்பர்களாயிருந்தோம் அவர்கள் லோக்கலில் இருப்பதால் பாதையும் பனியும் அத்துபடி..அவர்கள் என்னை பத்திரமாக  கொண்டுபோய் மலையடிவாரத்தில் சேர்ப்பதாக எங்கள் அதிகாரிகளிடம் உறுதிமொழி கொடுத்து ..பயணத்தை தொடங்கினோம்...!

முழங்காலுக்குமேல் அமுங்கும் பனி இருபது அடி நடந்தால் கால்கள் மறத்துபோய்விடும் இடையில் ஓய்வு எடுத்தால் பயணத்தை தொடர உடம்பு ஓத்துழைக்காது..! சுனோபூட்டை கழட்டி சாக்சில் தண்ணீரை பிழிந்து எடுத்து திரும்ப போட்டு கொண்டு  பயணம் எப்படி பேஸ்கேம்ப் வந்து சேர்ந்தேன் என்பது இன்றுவரை ஆண்டவனுக்கே வெளிச்சம்...!

ஒருவழியாய் போக்குவரத்து சோதனைகளை தாண்டி  ஐம்மு ரயில்வே ஸ்டேசனை வந்து அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டேன்...! உண்மையான சோதனையை இனிமேல்தான் சந்திக்கபோகிறேன் என்று அறியாமலே..!

அப்போது இப்போது இருப்பதுபோல் கைபேசி சாதனங்கள் இல்லை தெருவில் யார் வீட்டிலாவது தொலைபேசி இருக்கும் அவர்களுக்கு தகவல் சொல்லி அவர்கள் அம்மாவிடம் போய் சொல்லி பின்தான் பேசமுடியும்..அதுவும் தொலைபேசி வைத்திருப்பவர்கள் வேலையை பொருத்தும் மனநிலமையை பொருத்தும்தான் சாத்தியப்படும்...?..

வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலை எந்த இரயிலையும் தவற விட முடியாது இரவு புறப்பட்ட இரயிலில் ஏறி லெட்ரின் ஒரத்தில் இடம் பிடித்து டெல்லி வந்து சேர்ந்தேன்...
எங்கள் விடுமுறையை நாங்கள் தீர்மானிக்க முடியாததால் ரிசர்வேசன் என்பதும் கோட்டா என்பதும் முக்கால்வாசி ராணுவ வீரர்களுக்கு பகல் கனவுதான்...!

ஆனால் இரல்வே நிர்வாகம் எங்களுக்கு வரபிரசாதமான ஒரு அறிவுப்பு செய்திருந்தது ராணுவ வீரர்கள் ரிசர்வேசன் இல்லாவிட்டாலும் ரிசர்வேசன் பெட்டியில் பயணம் செய்யலாம் யாருக்கும் தொந்திரவு தராமல் இதுவே மிக பெரிய விசயம் தான்.ஏனென்றால் டெல்லியிலிருந்து சென்னை வருவதற்க்கு இரண்டே இரயில்கள்தான் தமிழ்நாடு ஜுடி எக்பிரஸ் என்பவை அதுவும் இரவில்தான் புறப்படும்.. இன்று தவறவிட்டால் இனி மறுநாள் இரவுதான்..எனவே எப்படிப்பட்டாவது என்ன விலை கொடுத்தேனும் பயணம் செய்வோம்..!

ராணுவ பெட்டி நிரம்பி வழியும் ...
அதனால் ரிசர்வேசன் பெட்டியில் ஏறி கொள்வோம்...யாரிடமும் கெஞ்சி கேட்டு உட்கார மனம் பெரும்பாலும் இடம்தராது  ...தமிழ்பேசும் யாராவது நட்பாய் பேசி கூப்பிட மாட்டார்களா என மனம் ஏங்கும்..!
எப்படியோ ரிசர்வேசன் பெட்டியில் ஏறிவிட்டேன் சாமான்களை எங்காவது வைப்பதற்க்கு இடம் கிடைக்காதா என தேட ஆரம்பித்தேன்  ..யாரும் எளிதல் அவர்களிடத்தில் வைக்க விடமாட்டார்கள் விட்டால் அவர்களுக்கு இடைஞ்சாலாய் இருப்போம் என நினைத்து கொள்வார்கள்...

கடைசியாக கழிவறைகிட்டேதான் இடம் கிடைக்கும்...
கால்கள் கெஞ்சும் படுப்பதற்க்காக....... கண்கள் தூக்கத்திற்க்காக அலைபாயும்...! எல்லையில் நன்றாய் தூங்கி பல நாட்கள் ஆகியிருக்கும்..!

எல்லோரும் உறங்கியபின்தான் நாங்கள் கொஞ்சம் எங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ளமுடியும்...
பனிரெண்டு மணிக்குமேல் எல்லோரும் உறங்க ஆரம்பித்தபின் நடைபாதையில் படுப்போம்...!

அதுவும் நிம்மதியாக தூங்க முடியாது ஏனென்றால் சாமான்கள் அதிகம் திருடப்படுவது ராணுவ வீரர்களிடம்தான் தன்னைமறந்து தூங்கும்போது சுலபமாக பறி கொடுத்து விடுவார்கள்....
நடைபாதை படுக்கைகூட உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்காகதானே தவிற உள்ளத்திற்கல்ல...!

தந்தை தாயை நினைத்து மனம் கவலையில் இருந்தது ஆனால் உடலுக்கு தெரியவில்லை ஓய்வை தேடியது...!
துக்கமும் தூக்கமும் ஆட்டிப்படைத்தது...!
காத்திருக்க ஆரம்பித்தேன் அனைவரும் உறங்குவதற்க்காக அப்போதுதான் பாதையில் படுக்கலாம்...
மணி பணிரெண்டை கடந்தது பெட்டியில் பேச்சு சத்தம் குறைந்து படுக்க தொடங்கினர்...

இந்தி பேப்பர் வாங்கி வைத்திருந்தேன் படிப்பதற்காக அல்ல படுப்பதற்காக ..!

ஒருவர் பாத்ரும் போக கையில் மக்குடன் போனார் திரும்ப வரும்போது மக்கில் உள்ள தண்ணீரை நடைபாதையில் நீளமாக கொட்டிவிட்டு சென்றார் என் மனம் பதைபதைத்தது... ஈரமான இடத்தில் எப்படி படுப்பது ...
ஏன் சார் பாத்து போக கூடாதா என கேட்க சாரி சொல்லிவிட்டு போனார்...

சரி பரவாயில்லை துண்டை போட்டு துடைத்துவிட்டு படுத்து கொள்ளளாம் என்று நினைக்க மீண்டும் ஒருவர் இதே காரியத்தை செய்ய செய்வதறியாது திகைத்தேன்....! சற்று நேரத்தில்
ஒரு முதியர்  வந்தார் என்ன தம்பி பாக்குறீங்க படுக்க முடியாமல் தண்ணீர் கொட்டி போய்விட்டார்கள் என்றா அது அவர்கள் தெரியாமல் செய்யவில்லை நீங்கள் இருப்பது இடைஞ்சலாக இருப்பதாக டிடிஆரிடம் சொன்னார்கள் அதற்க்கு அவர் நான் இவர்களை வேறு எடுத்துக்கு போ என்று விரட்ட முடியாது அரசாங்கத்தின் சலுகை அவர்கள் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்யலாம் என்பது ..!

நீங்கள் நினைதால் அவர்களை இங்கு இருக்கவிடாமல் செய்யலாம் நீங்கள் தூங்கியபின் பாதையிலும் இருக்கைகளுக்கு நடுவிலும் படுத்து கொள்வார்கள் நீங்கள் பாத்ரூம் போவதுபோல போய் தண்ணீரை கொட்டிவிடுங்கள் பின் அவர்களாகவே படுக்க இடம் இல்லாமல் அடுத்த பெட்டிக்கு சென்றுவிடுவார்கள் என்று அதான் அவர்கள் அப்படி செய்தார்கள்...என் மனசு கேட்கல வாங்க தம்பி என்கூட உட்காந்துகங்க...

பெரியவர் சொன்னதும் மனம் சுக்கு நூறாக உடைந்தது..எந்த ஜென்மத்து பாவம் இது...?

யோசித்தபோது புரிந்தது டிடிஆரின் மீதும் பயணிகள் மீதும் தவறில்லை...!
தங்கள் பயணம் சிறப்பாக இருக்க வேண்டிதான் அதிக பணம் கொடுத்து முனபதிவு செய்து பயணம் செய்கிறார்கள்...வழியில் நாம் இருப்பது இடைஞ்சல்தானே..?
பயணிகள் கஷ்டமில்லாமல்  பார்த்து கொள்ள வேண்டியது டிடிஆரின் கடமைதானே அதைதானே அவர் செய்திருக்கின்றார்..!

எல்லையில் நிற்பதும் தீவிரவாதிகளிடம் மோதுவதையும்விட கஷ்டமானது முனபதிவில்லாமல் பயணம் செய்து வீட்டை அடைவது..!

கடவுளே அடுத்தமுறையாவது முன்ஏற்பாடு செய்து போகும் பயணத்தை கொடு என்று வேண்டுவதை தவிற வேறு வழியில்லை.....!

கடைசிவரை அந்த வாய்ப்பு வரவில்லை ஒவ்வொரு முறையும் ஓவ்வொரு காரனம்...!

இதை பதிவு செய்வதற்கு காரனம் நீங்கள் டெல்லியிலிருந்து சென்னை பயணம் செய்பவராக இருந்தால் உங்கள் முன்பதிவு பெட்டியில் ராணுவ வீரர்கள் கழிவறை அருகில் சாமான் வைத்து நின்று கொண்டிருந்தால் சாமான் வைப்பதற்கும் முடிந்தால் காலடியில் உட்காருவதற்க்கும் இடம் கொடுங்கள்...!
அதுவே நீங்கள் செய்யும் பெரிய காரியமாகும்...!

இரயில் பயணங்களும் ராணுவ வாழ்க்கையும் என்றுமே முடிவில்லாதவை..!

பின் குறிப்பு  :_ நான் சென்னை வந்து சேருவதற்கு முதல் நாள் நல்லப்படியாக அறுவை சிகிச்சை முடிந்து என் தந்தை வீட்டுக்கு திரும்பியிருந்தார்..! என்னை பார்த்ததும் ஓடி வந்து கட்டிபிடித்த என் தாய் ஏன்டா இவ்வளவு லேட்டா வந்தே என்ற கேள்விக்கு என்னால் கண்ணீரை தவிற வேறு பதிலை தரமுடியவில்லை...!

பதிவாளர் Hamsaibai santhanakrishan.
(என்னாலும் கண்ணீரை தவிற வேறு பதிலை தரமுடியவில்லை...!)                மதிப்புமிகு நமது இந்திய இராணுவ வீரர்கள் படும் துயரம் தீர்க்க  👇செய்தி சேகரிப்பு & வெளியீடு சிறுவாணிச் சாரல் நியூஸ் டிராகிங் & மீடியா நெட்வொர்க் சிஸ்டம்                    🤝🤝🤝🤝🤝

இந்திய ராணுவ வீரர்களை ஏசியில் உடக்கார்ந்து விமர்சிக்கும் நபர்கள் இந்த பதிவை படிக்க share பண்ணுங்க..
🇮🇳ஜெய் ஹிந்த்🇮🇳
🇮🇳வந்தே மாதரம்🇮🇳

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H