பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் சென்னை 6
ந.க.எண் 014598/பிசி/2020 நாள் : 25.03.2020
பள்ளிக்கல்வி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு
ஒழுங்குமுறைகள் அனைத்து வகை பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு
வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல்.
பார்வை - 1ல் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்
பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப்
பள்ளிகளில் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து இன்று வரை
நடைமுறையில் உள்ளது .
2 . பார்வை 3ல்காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்
அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க பல்வேறு
பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது . மேலும் , 24 . 03 . 2020
மாலை 6 . 00 மணி முதல் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 144 தடை உத்தரவு
அமல்படுத்தப்பட்டுள்ளது .
3 . இதன் காரணமாக அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை
உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
எனவே , 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பள்ளி
இறுதித் தேர்வு இதன்மூலம் இரத்து செய்யப்படுகிறது . இக்கல்வியாண்டில்
அனைத்து வகை பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயின்ற
மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்படுகிறது .
இது சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள்
மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய
அறிவுரைகளை இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள் .
இதனைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித்
தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள்
எடுப்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு
அலுவலர்கள் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
மேலும் , இது சார்ந்த அறிக்கையினை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு
அனுப்பிவைத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும்
அறிவுறுத்தப்படுகிறார்கள் .