`3 மாத பணி; ரூ.20,000 சம்பளம்!’ - தமிழக அரசின் தற்காலிக வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கை வெளியீடு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 20 April 2020

`3 மாத பணி; ரூ.20,000 சம்பளம்!’ - தமிழக அரசின் தற்காலிக வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கை வெளியீடு:

கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தனித்துவமான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்துள்ளன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பெருமளவு பாதிப்பை சந்திக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 1,323 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்கள் ரெட் அலர்ட் செய்யப்பட்டதோடு, சுகாதாரப் பணியாளர்கள் தினமும் வீடுதோறும் சென்று, ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமாகி வீடு திரும்பத் தொடங்கியுள்ளனர் என சுகாதாரத் துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இன்னும் சில வாரங்கள் தீவிரமாகச் செயல்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக அவசர கால நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தற்காலிகப் பணியாளர்களாக 2,215 இரண்டாம் நிலை பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறையிலிருந்து அரசாணை வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளா் தற்காலிகப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு முடிவு செய்திருப்பதைத் தொடா்ந்து அது தொடா்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனா் குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பாணை:
தமிழகத்தில், இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளா் பணியிடங்களுக்கு, சேலத்தில் 98, திருவள்ளூரில் 80, மதுரையில் 79, திருப்பூா், செங்கல்பட்டில் தலா 73 என தமிழகம் முழுவதும் 2,215 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தற்போது, அவசரகால நோய்த் தடுப்புப் பணியை கருத்தில் கொண்டு, அந்த இடங்கள் மூன்று மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக நிரப்பப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பில், தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். மேலும், பிளஸ்-2 வகுப்பில் தாவரவியல், விலங்கியல், உயிரியல் பாடத்தை படித்திருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில், ஓராண்டு சுகாதாரப் பணியாளா் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவா்களுக்கு, மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்ற தகவலும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. இந்தப் பணியில் சேருவதற்கு, எவ்வாறு அணுக வேண்டும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் சில தினங்களில் மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணிக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மூன்று மாத ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தற்காலிக பணி என்று பாராமல் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்தடுத்து வரக்கூடிய அரசு வேலைவாய்ப்புகளில், இந்த பணி அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்.

8 comments:

  1. அருமையான பதிவு வாழ்த்துக்கள். எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் மக்களுக்கு சேவை செய்ய

    ReplyDelete
  2. Social work very good please give me jop 9786629563

    ReplyDelete
  3. Pls sir give me job
    Social work very good job sir

    ReplyDelete
  4. Good job please give me job

    ReplyDelete
  5. 1 year inspector course compulsory

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H