1. நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன.
2. கங்கை நதி குடிநீராக மாறுகிறது... சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது...
3. மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது.
4. இந்த ஏப்ரல் மாத இரவில் லேசாகக் குளிர்கிறது.
5. இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது என்று புரிகிறது.
6. விஞ்ஞானத்தில், நாம் செய்த கண்டுபிடிப்புகளை எல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது. இன்னும் இந்த பூமியில் நாம் வெற்றியின் உச்சம் காணவில்லை என்று புரிகிறது.
7. இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை ஆகி விட்டது. 2. கங்கை நதி குடிநீராக மாறுகிறது... சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது...
3. மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது.
4. இந்த ஏப்ரல் மாத இரவில் லேசாகக் குளிர்கிறது.
5. இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது என்று புரிகிறது.
6. விஞ்ஞானத்தில், நாம் செய்த கண்டுபிடிப்புகளை எல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது. இன்னும் இந்த பூமியில் நாம் வெற்றியின் உச்சம் காணவில்லை என்று புரிகிறது.
8. முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது.
9. துறை சார்ந்து, அறம் தவறியவர்களாக சினிமாவில் காட்டப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும் தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
10. சினிமா நடிகர்கள் நடிகைகள் கிசுகிசுக்கள் முக்கியமற்று போய் விட்டன.
11. நிமிர்ந்து ஏறிட்டு இது வரை பார்க்கப்படாத துப்புறவுத் தொழிலாளர்கள் கால்கள் பூஜை செய்யப்படுகின்றன.
12. ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை.
13. உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம். மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன.
14. சுமார் 1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார்.
15. சுமார் 65 வயது கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.
ஆக, இறுதியில் பாசம் மட்டுமே ஜெயிக்கிறது.
16. முதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து, வீட்டில் முடங்கி இருக்கும் குடும்ப பெண்கள் அதிகம் வெளியே செல்ல ஏன் ஏங்குகிறார்கள் என்ற சைக்காலஜி இப்போது புரிவதாக கணவர் ஒருவர் புலனத்தில் பதிவிடுகிறார்.
17. பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி நடந்த பிறந்த நாள் கொண்டாட்டம், வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்து, கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்தி, மகிழ்ச்சியாக நடைபெறுகிறது.
18. குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் மஞ்சள் கலந்த பாலும் , மிளகு ரசமும் வந்துவிட்டது.
19. மேக்கப் இல்லாமல், முகம் கோணாமல், சமைக்கும் மனைவி அழகாக தெரிகிறாள். உடன் உதவும் கணவன் வார்த்தைகளில் காதல் பளிச்சிடுகிறது.
20. பெரியவர்களிடம் பேசினால் போர் அடிக்காது என்று உணர்கிறார்கள் குழந்தைகள்.
அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது.
பரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.
நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.
இந்தப் பேரிடரை முன்வைத்து மரபு சார்ந்த.. இயற்கை சார்ந்த வாழ்வை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...