சென்னை:
சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, எண்ணெய்
நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக
பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை இன்று
ரூ.61.5 முதல் ரூ.65 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்தக்கவலை இந்தியன் ஆயில்
நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 2-வது மாதமாக சிலிண்டரின்
விலை குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட
விலையின் படி, டெல்லியில் ரூ.805க்கு விற்பனையாகி வரும் சிலிண்டரின் விலை,
ஏப்ரல் 1 முதல் ரூ.744க்கு விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையில் ரூ.826-ல் இருந்து ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ரூ.714.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.774.50 ஆகவும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா 12 கியாஸ்
சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கான மானியம்
நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு
மேல், சிலிண்டர்கள் தேவைப்பட்டால் சந்தை விலையில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...