கணிதப் புதிர்கள் மூலமாகக் கணக்கு கற்பித்தல்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கணிதப் புதிர்கள் மூலமாகக் கணக்கு கற்பித்தல்:


கணிதப் பாடத்தில் மாணவர்களுக்கு நாட்டம் வரவைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு புதிர்க்கணக்குகள் மூலம் கணக்கை மாணவர்களிடம் எப்படி கொண்டு செல்லலாம் என்று வகுப்பில் செய்து பார்த்த முயற்சி. கதைகளைக் கேட்கும் ஆர்வத்தைக், கணிதத்திற்கு உபயோகப்படுத்தியதால் மாணவர்கள் மிகவும் ஆர்வமாகவும், துடிப்பாகவும், நண்பர்களோடு சேர்த்து விடை கண்டுபிடிக்கத் தூண்டுகிறது. இவ்வாறாக, கணக்கைக் கதையாக மாற்றி கணக்கின் சுவையை அறியவைத்த அனுபவம்.​
மாணவனின் கண்ணோட்டத்தில், கணக்கு = கசப்பு (அல்லது கஷ்டம்)
சுவைக்காமலே “கணக்கு கசப்பு!!” என்று நிறைய மாணவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். கணக்கின் சுவையை அறிய வைக்க சில வழிமுறைகளைக் கையாண்டேன்.
குறிக்கோள்:
  • சுவைக்காமலே “கணக்கு கசப்பு” என்று சொல்வதை மாற்ற வேண்டும்.​
  • புதிர்க்கணக்குகள் மூலம் கணக்கை மாணவர்களிடம் கொண்டு செல்வது.
மாணவர்களிடம் கதை கூறுவது போல் ஒரு புதிர்க்கணக்கைக் கேட்டேன்.​
(எ.கா.)“ஒரு பெரிய காடு; அதற்குள் செல்ல 12 கதவுகள். ஒவ்வொரு கதவிலும் ஒரு பூதம் இருக்கும் அது கேட்கும் வினாவிற்கு நீ விடை சொல்ல வேண்டும்” எனச் சொல்லி சிறிய புதிர்க்கணக்குகளைக் கூறுவேன். மாணவர்கள் ஆர்வமாகக் கேட்க துவங்கினார்கள். ஒரு மாணவன் ஒரு கதவைத் திறந்தான். அவனுக்கான புதிர்க்கதையைக் கேட்டேன்.
மற்ற மாணவர்களும் மிகவும் ஆர்வமாகவும், துடிப்பாகவும், நண்பர்களோடு சேர்ந்து விடை கண்டுபிடித்துச் சொல்வார்கள். இவ்வாறாக, கணக்கைக் கதையாக மாற்றி அதன் சுவையை அறிய வைக்க முயற்சி செய்தேன்.
வகுப்பில் கேட்கப்பட்ட சில கணிதப் புதிர்கள்:​
புதிர்க் கேள்வி 1:
ஒரு கிலோ பஞ்சு, ஒரு கிலோ இரும்பு; இவற்றில் எது எடை அதிகம்?​

மாணவர்களின் வெளிப்பாடுகள்:​
  • “கடைக்குப் போய் ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை வாங்கு” எனச் சொல்லும் போது அவர்களின் பதில்கள் “இரண்டும் ஒன்று!!” போலவே உள்ளது. ​
  • “பஞ்சு அதிக இடத்தை அடைத்துக் கொள்கிறது. ஆனால் இரும்பு குறைந்த இடத்தை அடைத்துக் கொள்கிறது. எடை ஒன்று தான். ஆனால், தோற்றம் வெவ்வேறாக உள்ளது” என்பது அவர்களது கருத்து.​
புதிர்க் கேள்வி 2: வட்டக் கணக்கு புதிர்
ஏழு சம-ஆரமுள்ள வட்டங்கள் உள்ளது. இவற்றை எந்த வரிசையில் பார்த்தாலும் மூன்று வருமாறு எப்படிச் செய்வது?

மாணவர்களை வரையச் செய்தேன்.  “எப்படி மூன்று வரிசையில் வரைவது?” என மாணவர்கள் யோசித்தனர்.​ஒன்பது வட்டம் இருந்திருந்தால்தான் மூன்று வரிசையில் வரைய முடியும் என்று யோசித்தனர்.​பலவாறு வரைந்து வரைந்து பார்த்த பின் கடைசியில் விடையைக் கண்டுபிடித்தனர்.​
ஒரு மாணவன் கீழே உள்ளவாறு வரைந்து காண்பித்தான்.​
புதிரின் விடை:

அவர்களாகவே ஒரு கணக்கு புதிர்க்கு விடை கண்டுபிடித்து அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..​
புதிர்க் கேள்வி 3: மாயச் சதுரம்​
’ஒன்று, இரண்டு, மூன்று’ மட்டும் பயன்படுத்தி எந்த வரிசையில் கூட்டினாலும் ஆறு வர வேண்டும்.எப்படி? என்று கூறிவிட்டு, படத்தில் உள்ளவாறு மாயச்சதுரம் அமைத்துக் காட்டினேன்.​
3 1 2
1 2 3
2 3 1
இதன்மூலமாக, அனைவரையும் மாயச்சதுரம் எனும் புதிரில் கவனத்தைக் கொண்டு வந்தேன்.வேறு மூன்று எண்களுக்கு அவர்களைப் போட சொன்னேன். ஆரம்பத்தில் சிறு பிழை ஏற்பட்டது. ஆனால், விரைவாகவே புரிந்து கொண்டனர். ​​
அடுத்த கட்டத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும் நோக்கோடு​ வினாவைத் தொடுத்தேன்.
புதிர் வினா: ஒன்று முதல் ஒன்பது எண்கள் வரை உபயோகிக்க வேண்டும். எழுதிய எண்களை மறுபடி உபயோகிக்கக்கூடாது. எல்லா வரிசையின் கூட்டுத் தொகை 15 வர வேண்டும்.
மாணவர்கள் போட ஆரம்பித்தனர்.​இறுதியில் அவர்கள் தாங்களாகவே விடையைக் கண்டு பிடித்தனர்.​​
புதிரின் விடை:
2 7 6
9 5 1
4 3 8
இது போன்ற புதிர்க்கணக்கின் தாக்கம்:​
  • மதிய இடைவேளையில், ஆசிரியர் யாரும் இல்லை  என்றாலும் அவர்களே தங்களது புத்தகத்தை எடுத்து கணக்குகளைச்  செய்துபார்க்க ஆரம்பித்தனர்.​
  • அன்று முதல் மாணவச் செல்வங்கள் கணக்கைச் சுவைத்து அதில் மேதை ஆவதற்கான முதற் படியை எடுத்து வைத்துள்ளனர்.​
  • ஒரு விளையாட்டாகக் கணக்கைக் கொண்டு செல்வதன் மூலம் மாணவர்களின் ஆர்வத்தையும், அறிவையும் தூண்ட முடியும் என்பது உண்மையாகிவிட்டது.​
மாணவர்கள் மிகவும் ஆர்வமாகவும், துடிப்பாகவும் தன் நண்பர்களோடு சேர்ந்து விடை கண்டுபிடுத்துச் சொல்வார்கள். இவ்வாறாக கணக்கைக் கதையாக மாற்றி அதன் சுவையை அறிய வைத்தேன்.இப்போதெல்லாம், தினமும் மாணவர்கள் என்னிடம் புதிய புதிர்க்கணக்குகளைக் கேட்கும்படி எதிர்பார்க்கின்றனர்.
Teacher: Gayathri
Subject: 
Primary Maths
Term: Term 3

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H