உடல், மனம் மேம்பட
ஆரோக்கியம்’ என்றால் என்ன? `உலக சகோதர மையம்’ என்ற அமைப்பு சொல்கிறது…
உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் எனக் குறிப்பிட முடியும்’ என்கிறது.
ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மன அளவில் மகிழ்ச்சி இல்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல.
இந்தச் செய்தி பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப் போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர். ஆரோக்கியம்’ என்றால் என்ன? `உலக சகோதர மையம்’ என்ற அமைப்பு சொல்கிறது…
உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் எனக் குறிப்பிட முடியும்’ என்கிறது.
ஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மன அளவில் மகிழ்ச்சி இல்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல.
உண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியம் குறையும்;
அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப் போகும்.
மனதில் தோன்றும் எண்ணங்கள் தான் உடலின் ஆரோக்கியத்திற்கு உந்து சக்தியாக அமையும்.
அதை அனுபவித்தவர்கள் பகிர்ந்த சாட்சிகள் பல இணையத்தில் உள்ளது.
உடல் நோய் வாய்ப் படும் பொழுது மனதை திடமாக இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கால அளவை விட மனம் நொந்து இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கால அளவு என்பது அதிகம் ஆகிறது.
எனவே தான் மருத்துவர்கள் தைரியமாக இருங்கள் என்று நோயாளிகளிடம் கூறுவதைக் கண்டு இருக்கிறோம்.
நம்மில் பலருக்கு தினமும் மனதையும், உடலையும் மேம்படுத்த நேரம் இல்லை என்பார்கள்..
ஆனால் தினமும் உடற் பயிற்சிக்கும் மற்றும் மனப் பயிற்சிக்கும் என்று செலவு செய்பவர்கள் வாழ்க்கையை தினம் தினம் முழுமையான ஆரோக்கியத்துடன் முழமையான இனிமையுடன் அனுபவிக்கலாம்.
''நோயற்ற வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை".
இனிமையான ஆரோக்கியமான வாழ்க்கை என்பது,
உடல், மனம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்து, இயங்கி ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனிதனுக்குக் கிடைக்கும் ஒரு வரப் பிரசாதம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...