கொசுக்கள் கடித்த இடத்தில் சிவப்பு
நிறத்தில் தழும்பும், அரிப்பும் ஏற்படும். அந்த இடத்தில் வாழைப்பழ தோலை
பயன்படுத்தலாம். வாழைப்பழத்தோல் தோல் அழற்சி எதிர்ப்பு பண்புகளை
கொண்டுள்ளது. கொசு கடித்தால் ஏற்படும் சிவப்பு தழும்பை போக்கும் தன்மையும்
அதற்கு இருக்கிறது. வாழைப்பழ தோலின் உள்பகுதியில் இருக்கும் இழைகளை தனியாக
எடுத்து பிசைந்து கொள்ள வேண்டும். அதனுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து குழைத்து
கொசு கடித்த இடத்தில் பூச வேண்டும். பின்னர் அதன் மேல் ஐஸ் கியூப்பை வைத்து
பருத்தி துணியால் கட்டவேண்டும். கால் மணி நேரம் கழித்து கழற்றி விடலாம்.
கொசுக்கடிக்கு வெள்ளரிக்காயையும் உபயோகப்படுத்தலாம். அதற்கும் சரும அரிப்பை
போக்கும் தன்மை உண்டு. வாழைப்பழ தோல் மசியலுடன் சிறிதளவு
வெள்ளரிக்காயையும் மசித்து அதனை கொசு கடித்த இடத்தில் பூசி அரைமணி நேரம்
கழித்து உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். பின்பு அதனை
துடைக்கக்கூடாது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...