இந்தோனேசியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், மற்ற உலக நாடுகளில் பரவி வரும் வைரசிடமிருந்து மாறுபட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்து உள்ளது. அங்கு பரவி வரும் கொரோனா வைரசின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.
அந்நாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மந்திரி பாம்பங் பிராட்ஜாங்கொரோ கூறுகையில், “ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை 3 விதமாக கொரோனா வைரஸ் உருமாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தோனேசியாவிலிருந்து ஆய்வுக்கு அனுப்பப்பட்ட வைரசின் மாதிரிகள் இதுவரை கண்டறியப்படாத வகைகளில் ஒன்றாகும். எனினும் இவை வைரசின் உருமாற்றம் மற்றும் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிகரமாக அமையும்” என்றார்.