தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இளநிலைப் பொறியியல் சேர்க்கைகள் நடத்தப்படுகின்றன.
ஜூன் இறுதியில் நடத்துவதற்காக இளநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு பணிகள் தொடங்கிவிட்டன.
வழக்கமான திட்டத்தோடு ஜூன் இறுதியில் கலந்தாய்வுகளை நடத்த, பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளை மாநிலம் முழுவதும் நடத்தும், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. பொறியியல் சேர்க்கைகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது.
ஜூன் இறுதியில் நடத்துவதற்காக இளநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு பணிகள் தொடங்கிவிட்டன.
வழக்கமான திட்டத்தோடு ஜூன் இறுதியில் கலந்தாய்வுகளை நடத்த, பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளை மாநிலம் முழுவதும் நடத்தும், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. பொறியியல் சேர்க்கைகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது.
2 லட்சம் விண்ணப்பங்களைக் கையாளும் மென்பொருளோடு 500 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்தது. இதற்கு முன்பு கலந்தாய்வுகளை மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகம் அப்பணிகளைக் கையாள மறுத்ததால், 2019 முதல் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் கலந்தாய்வுகளை நடத்துகிறது. கடந்த ஆண்டைப் போலவே தரமணியில் உள்ள மத்திய பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இளநிலைப் பொறியியல் சேர்க்கைகள் நடத்தப்படுகின்றன.
மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் தேதிகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடத்தப்படும் என்றும் பொறியியல் நுழைவுத்தேர்வு ஜூலை 18 - ஜூலை 23 நாட்களுக்குள் நடக்கும் என்றும் தெரிவித்தது. ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், தேர்வுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.