''பத்தாம் வகுப்பு தேர்வர்கள் வசதிக்காக, 22 வழிமுறைகள் தயார்
செய்யப்பட்டுள்ளன,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன்
கூறினார்.ஈரோடில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகம் முழுதும், ஜூன், 15ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும். தேர்வர்கள் வசதிக்காக, 'இ - பாஸ்' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. எந்த சிரமமும் இன்றி தேர்வர்கள், இ - பாஸ் பெறும் வழிமுறைகள் குறித்து, சுற்றறிக்கை தயார் செய்து உள்ளோம்.
அதில், தேர்வரின் வசதிக்காக, பஸ் போக்குவரத்து, இ - பாஸ் முறை, அடையாள அட்டை என, மொத்தம், 22 வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பொதுத்தேர்வு முடிந்த பின்,தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். தேர்வர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மாணவர்களின் ஆரோக்கியத்துக்காக, தேர்வு மையங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளன. முதலில், 3,684 மையங்கள் இருந்தன. இப்போது, மூன்று மடங்கு உயர்த்தி, 12 ஆயிரத்து,674 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழகம் முழுதும், ஜூன், 15ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும். தேர்வர்கள் வசதிக்காக, 'இ - பாஸ்' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. எந்த சிரமமும் இன்றி தேர்வர்கள், இ - பாஸ் பெறும் வழிமுறைகள் குறித்து, சுற்றறிக்கை தயார் செய்து உள்ளோம்.
அதில், தேர்வரின் வசதிக்காக, பஸ் போக்குவரத்து, இ - பாஸ் முறை, அடையாள அட்டை என, மொத்தம், 22 வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பொதுத்தேர்வு முடிந்த பின்,தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். தேர்வர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மாணவர்களின் ஆரோக்கியத்துக்காக, தேர்வு மையங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளன. முதலில், 3,684 மையங்கள் இருந்தன. இப்போது, மூன்று மடங்கு உயர்த்தி, 12 ஆயிரத்து,674 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...