சமூக
வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில்- எலுமிச்சை சாறு, கிராம்பு, மஞ்சள் தூள்
மற்றும் இஞ்சி உள்ளிட்டவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் இதனை
குடித்தால் கொரோனா வைரஸ் தொற்று சரியாகிடும் என கூறும் புகைப்படம்
அதிகளவில் பகிரப்பப்பட்டு வருகிறது.
வைரல்
புகைப்படத்தில், கஷாயம் அல்லது கதா என அழைக்கப்படும் ஆயுர்வேத நீர்
மருத்துவ தேநீர் என்றும் அழைக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டு
இருக்கும் பொருட்களை சரியான விகிதத்தில் சேர்த்து கஷாயம் செய்து குடிக்க
வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்ததில்,
இந்த கஷாயம் கொரோனா வைரஸ் தொற்றை சரி செய்துவிடும் என எந்த மருத்துவரும்
பரிந்துரைக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கஷாயம் உடலில் நோய்
எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என ஆயுர்வேத வல்லுநர் தெரிவிக்கிறார்.
எனினும், இது கொரோனா வைரஸ் தொற்றை சரி செய்யும் என இதுவரை
நிரூபிக்கப்படவில்லை.
அந்த வகையில் வைரல்
தகவல்களில் உள்ளது போன்று கஷாயம் குடித்தால் கொரோனா நோய் தொற்று சரியாகி
விடும் என்பது முற்றிலும் பொய் என உறுதியாகிவிட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...