மக்களிடையே சில உணவுப் பொருட்களால்
கூட சிறுநீரக கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர். அந்த
வகையில் பார்க்கும் போது தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்ற
நம்பிக்கை இருந்து வருகிறது. அது உண்மை தானா இல்லை அது வெறும் கட்டுக்கதையா
என்பதை பற்றி இங்கே காண்போம்.
தக்காளி ஒவ்வொரு இந்திய உணவு வகைகளிலும் இன்றியமையாத ஒன்று. நாம்
சாப்பிடும் கறிக் குழம்பில் இருந்து கெட்ச்அப் வரை இதன் பயன்பாடு
இன்றியமையாதது. தக்காளியின் தனித்துவமான சுவை மேலும் உணவிற்கு சுவை
சேர்க்கிறது.
அதுமட்டுமல்லாமல் தக்காளியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன.
விட்டமின் ஏ, பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் ஆகிய ஏராளமான
ஊட்டச்சத்துகள் உள்ளன. தக்காளி கண் பார்வைக்கு நல்லது. நீரிழிவு சிக்கல்களை
களைய உதவுகிறது. சூரிய பாதிப்பிலிருந்து காக்கிறது. புரோஸ்டேட்
புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
சிறுநீரக கற்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கால்சியம் கற்கள்.
நமது சிறுநீரகங்களில் அதிகளவு கால்சியம் ஆக்ஸலேட் படிவதால் தான் இந்த
மாதிரியான கற்கள் உருவாகிறது. இந்த கால்சியம் ஆக்ஸலேட் பல்வேறு வகையான
காய்கறிகளிலும் பழங்களிலும் காணப்படுகிறது. மேலும் நம் கல்லீரலும் தினமும்
குறிப்பிட்ட அளவு கால்சியத்தை உற்பத்தி செய்கிறது. நமது எலும்புகள் மற்றும்
தசைகள் இரத்தத்தில் இருந்து அதிகளவு கால்சியத்தை உறிஞ்சி விடுகின்றன.
இதுவே இந்த கால்சியம் அளவு இரத்தத்தில் அதிகமாக இருக்கும் போது சிறுநீரின்
வழியாக வெளியேற்ற வேண்டிய சூழல் உண்டாகிறது. ஆனால் சிறுநீரகத்தால் அவ்வளவு
கால்சியத்தை வெளியேற்ற முடியாது. எனவே இந்த கால்சியம் படிப்படியாக படிந்து
படிகக் கற்களின் வடிவத்தை அடைகிறது. எனவே தான் தக்காளியில் ஆக்ஸலேட்
இருப்பதால் அதை சிறுநீரக கற்களுடன் இணைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் தக்காளியில் காணப்படும் ஆக்ஸலேட் அளவு மிகவும் குறைவு.
இந்த ஆக்ஸலேட் அளவு சிறுநீரக கற்களை உருவாக்காது. 100 கிராம் தக்காளியில் 5
கிராம் அளவு ஆக்ஸலேட் மட்டுமே இருக்கிறது. எனவே தக்காளியை சாப்பிட்டால்
சிறுநீரக கற்கள் உருவாகும் என்பதை நீங்கள் நம்ப வேண்டாம். நீங்கள்
ஆரோக்கியமாக இருந்தால் உங்க சிறுநீரை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் அளவிற்கு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ள முடியும்.
இதுவே நீங்கள் சிறுநீரக தொடர்பான பிரச்சினைகளை கொண்டு இருந்தால் கீரை,
பீன்ஸ், பீட்ரூட் போன்ற அதிக அளவு ஆக்ஸலேட் உணவுகளை தவிருங்கள். காய்கறிகளை
சாப்பிடுவதற்கு முன்பு சரியாக சமைத்து சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...