திருச்சி; வன விலங்குகளை வேட்டையாடிய வாலிபர், அதை சமைத்துக் கொடுத்த,
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையான தாய் உட்பட, மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, நெடுங்கூர் வனப் பகுதியில், 12ம் தேதி வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த, பெரம்பலுார், பாடாலுாரைச் சேர்ந்த பிரபு, 30, என்பவரை பிடித்து விசாரித்தனர்.எம்.எஸ்சி., படித்த பிரபு, அதே பகுதியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளாக, நண்பர்களுடன் சேர்ந்து, திருச்சி மாவட்ட வனப்பகுதியில், காட்டுப்பன்றி, முயல் மற்றும் நரி போன்றவற்றை வேட்டையாடியது தெரிந்தது.
திருச்சி, நெடுங்கூர் வனப் பகுதியில், 12ம் தேதி வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த, பெரம்பலுார், பாடாலுாரைச் சேர்ந்த பிரபு, 30, என்பவரை பிடித்து விசாரித்தனர்.எம்.எஸ்சி., படித்த பிரபு, அதே பகுதியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளாக, நண்பர்களுடன் சேர்ந்து, திருச்சி மாவட்ட வனப்பகுதியில், காட்டுப்பன்றி, முயல் மற்றும் நரி போன்றவற்றை வேட்டையாடியது தெரிந்தது.
இவர் வேட்டையாடிய வன விலங்குகளை, இவரது தாயும், நெய்குளம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை யுமான லட்சுமி, 53, சமைத்து கொடுத்துள்ளார்.இதையடுத்து தாய், மகனை கைது செய்த வனத்துறையினர், உடந்தையாக இருந்த மகாலிங்கம், 58, என்பவரையும் கைது செய்து, நாட்டுத் துப்பாக்கி, ஹெட்லைட் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.பாகிஸ்தான் தொடர்பு பாடாலுாரில், பிரபு வீட்டில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு, வன உயிரினங்களை வேட்டையாடியது தொடர்பான ஏராளமான போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தன.மேலும், 'மெசஞ்சர்' மூலம், 'பாகிஸ்தான் ஹன்டிங் கிளப்'புடன் தொடர்பில் இருந்ததும், கண்டறியப்பட்டது. வேட்டை தொடர்பான தகவல்களை மட்டுமே பாகிஸ்தானியர்களுடன் பகிர்ந்து கொண்டதாக, பிரபு தெரிவித்துள்ளார்.இருப்பினும், வேறு காரணங்களுக்காக, பாகிஸ்தான் ஹன்டிங் கிளப்புடன் பிரபு தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும், விசாரணை நடக்கிறது.