இதுகுறித்து, மின் வாரியம் அறிவிப்பு:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும் தாழ்வழுத்த நுகர்வோரில், மார்ச், 25ம் தேதி முதல் ஜூலை, 5ம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்த, கடைசி தேதி உள்ளவர்கள், ஜூலை, 6ம் தேதி வரை, தாமத மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.கால நீட்டிப்பு இல்லைமற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோரில், கட்டணம் செலுத்த கடைசி தேதி, மார்ச், 25 முதல் வரும், 14ம் தேதி வரை இருப்பின், அவர்கள், வரும், 15ம் தேதி வரை, தாமத கட்டணமின்றி செலுத்தலாம். அம்மாவட்டங்களில் வசிப்போர், மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி, வரும், 15 மற்றும் அதற்கு பின் இருப்பின், கடைசி தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்; கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது.
15ம் தேதிபெரிய தொழிற்சாலைகளை உள்ளடக்கிய, அனைத்து உயரழுத்த நுகர்வோர்களை பொருத்தவரை, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்தாமல் இருப்பின், வரும், 15ம் தேதிக்குள் செலுத்தலாம். அவர்களுக்கு, மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படாது. மே மாத மின் கட்டணத்தை, நுகர்வோர், அதற்கான குறிப்பிட்ட கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.








