சென்னை; வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த நுகர்வோர், மின் கட்டணத்தை, அபராதம் இன்றி செலுத்த, மின் வாரியம், அவகாசம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரியம் அறிவிப்பு:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும் தாழ்வழுத்த நுகர்வோரில், மார்ச், 25ம் தேதி முதல் ஜூலை, 5ம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்த, கடைசி தேதி உள்ளவர்கள், ஜூலை, 6ம் தேதி வரை, தாமத மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.கால நீட்டிப்பு இல்லைமற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோரில், கட்டணம் செலுத்த கடைசி தேதி, மார்ச், 25 முதல் வரும், 14ம் தேதி வரை இருப்பின், அவர்கள், வரும், 15ம் தேதி வரை, தாமத கட்டணமின்றி செலுத்தலாம். அம்மாவட்டங்களில் வசிப்போர், மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி, வரும், 15 மற்றும் அதற்கு பின் இருப்பின், கடைசி தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்; கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது.
இதுகுறித்து, மின் வாரியம் அறிவிப்பு:சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும் தாழ்வழுத்த நுகர்வோரில், மார்ச், 25ம் தேதி முதல் ஜூலை, 5ம் தேதி வரை, மின் கட்டணம் செலுத்த, கடைசி தேதி உள்ளவர்கள், ஜூலை, 6ம் தேதி வரை, தாமத மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.கால நீட்டிப்பு இல்லைமற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோரில், கட்டணம் செலுத்த கடைசி தேதி, மார்ச், 25 முதல் வரும், 14ம் தேதி வரை இருப்பின், அவர்கள், வரும், 15ம் தேதி வரை, தாமத கட்டணமின்றி செலுத்தலாம். அம்மாவட்டங்களில் வசிப்போர், மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி, வரும், 15 மற்றும் அதற்கு பின் இருப்பின், கடைசி தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்; கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது.
15ம் தேதிபெரிய தொழிற்சாலைகளை உள்ளடக்கிய, அனைத்து உயரழுத்த நுகர்வோர்களை பொருத்தவரை, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்தாமல் இருப்பின், வரும், 15ம் தேதிக்குள் செலுத்தலாம். அவர்களுக்கு, மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படாது. மே மாத மின் கட்டணத்தை, நுகர்வோர், அதற்கான குறிப்பிட்ட கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...