இத்தொலைக்காட்சியில் , எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் , படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் , மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள் , பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள் , புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல் , அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் , கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
கோவிட் -19 வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் , வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் , கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்கள்.
மாணவ , பள்ளிக் கல்வித் துறையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 - ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12 - ஆம் வகுப்பு மாணாக்கர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை ( Video Lessons ) மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi - Tech Labs ) வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை , அவ்வல்லுநர் குழுவின் தலைவரான பள்ளிக் கல்வி ஆணையர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன் , இ.ஆ.ப. , அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் , மாண்புமிகு பள்ளிக் கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு . கே.ஏ. செங்கோட்டையன் , தலைமைச் செயலாளர் திரு . க . சண்முகம் , இ.ஆ.ப. , பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு . தீரஜ்குமார் , இ.ஆ.ப. , பள்ளிக் கல்வி ஆணையர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன் , இ.ஆ.ப. , பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு :
இயக்குநர் ,
செய்தி மக்கள் தொடர்புத்துறை ,
சென்னை -9
நாள் : 14.7.2020 )









