சென்னை; தமிழக அரசின் பாடத் திட்டத்தில் படித்த, மும்பை மாணவர்கள், 69
பேர், 10ம் வகுப்பு தேர்வில், தேர்ச்சி பெற்றதாக, முதல்வர் இ.பி.எஸ்.,
அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வாழ் தமிழ் மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மும்பையில் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில், தமிழ் வழியில், தமிழக அரசின் பாடத் திட்டத்தில் படித்த, 69 பள்ளி மாணவர்கள், மும்பையில் உள்ள, பிரைட் உயர்நிலைப் பள்ளி, பாண்டூர் மற்றும் ஸ்டார் ஆங்கில பள்ளி, சீத்தா கேம்ப் ஆகிய, தேர்வு மையங்களில், தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு, கொரோனா
நோய் தொற்றிலிருந்து, பள்ளி மாணவர்களை காக்க, தமிழகத்தில், 10ம் வகுப்பு
பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும், தேர்ச்சி
பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.அதேபோல, மும்பை தேர்வு மையத்தில்
பதிவு செய்த, 69 மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி
பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறது. அவர்களுக்கான மதிப்பெண்களை, ஏற்கனவே
அறிவிக்கப்பட்ட நடைமுறையின்படி வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.இவ்வாறு,
முதல்வர் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வாழ் தமிழ் மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மும்பையில் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில், தமிழ் வழியில், தமிழக அரசின் பாடத் திட்டத்தில் படித்த, 69 பள்ளி மாணவர்கள், மும்பையில் உள்ள, பிரைட் உயர்நிலைப் பள்ளி, பாண்டூர் மற்றும் ஸ்டார் ஆங்கில பள்ளி, சீத்தா கேம்ப் ஆகிய, தேர்வு மையங்களில், தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...